Tuesday, January 8, 2013

ta


Un Paarvayil Vizhuntha Naal Muthal
En Thunbangal Maranthu Ponathu
Un Kai Viral Sera Thudikuthu Anbe Anbe.
Un Paarvayil Vizhuntha Naal Muthal
En Thunbangal Maranthu Ponathu
Un Kai Viral Sera Thudikuthu Anbe Anbe.

Wednesday, July 25, 2012

முகம் எரிந்த நிலையில் வாலிபர் பிணம்

விருத்தாசலம் : கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அ‌ருகே குப்பநத்தம், சல்லடை ஏரியில் இன்று காலை அடையாளம் தெரியாத, 32 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் ஒன்று மிதந்துள்ளது. முகத்தை கைலியால் மூடி எரிக்கப்பட்ட நிலையில் அந்த வாலிபர் பிணம் கிடந்துள்ளது. இதனால் அவர் யார் என்ன என்பது பற்றிய விபரம் தெரியவில்லை. இதுகுறித்து டி.எஸ்.பி. வெங்கடேசன் மற்றும் இன்ஸ்பெக்டர் தீராளன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புகையை முகத்தில் ஊதியதால் ஓட ஓட விரட்டி வாலிபர் கொலை

சென்னை: சிகரெட் புகையை முகத்தில் ஊதியவரை ஓட ஓட விரட்டி கொலை செய்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கொருக்குப்பேட்டை, திருநாவுக்கரசு தோட்டம், முதலாவது தெருவை சேர்ந்த லோகநாதன் மகன் ஸ்ரீதர், 28. சென்னை துறைமுக ஒப்பந்த தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை பணி முடித்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் பசுவைய்யன் தெரு வழியாக வந்தார். பங்க் கடை அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திய ஸ்ரீதர், சிகரெட் வாங்கி புகைத்துக்கொண்டிருந்தார். அங்கு ராமானுஜம் கூடம் தெருவை சேர்ந்த குமார், 19, தாமோதரன், 18, சதீஷ், 18 ஆகியோர் டீ குடித்துக் கொண்டிருந்தனர். ஸ்ரீதர் புகையை இழுத்து டீ குடித்துக்கொண்டிருந்த வாலிபர்கள் முகத்தில் விட்டதாக கூறப்படுகிறது. இதில் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. கைலாயத்தெருவில் புதிய கட்டடம் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. அங்கு கிடந்த கட்டைகளை எடுத்து வந்து, வாலிபர்கள் ஸ்ரீதரை பயங்கரமாகத் தாக்கினர். அவர் தப்பி ஓடினார். வாலிபர்கள் விட வில்லை. ஓட ஓட விரட்டினர். கட்டையால் சரமாரியாக தாக்கினர். அடி தாங்க முடியாமல் ஸ்ரீதர் ரத்த வெள்ளத்தில் விழுந்தார். இது குறித்து, அந்த பகுதிவாசிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்தனர். அதற்குள் ஸ்ரீதர் மரணம் அடைந்தார். அவரது உடலை கைப்பற்றி கொருக்குப்பேட்டை போலீசார், விசாரித்தனர். கொலை வழக்கு தொடர்பாக, குமார், தாமோதரன், சதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.

ஓடும் ரயிலில் இளம் பெண்ணை கீழே தள்ளிவிட்ட வாலிபர்கள்:

பெங்களூரு: கர்நாடகாவில் ஓடும் ரயிலில் 4 வாலிபர்கள் , இளம் பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த அந்த இளம் பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.இது தொடர்பாக 2 இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரைச் சேர்ந்தவர் திவ்யா (19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர், வித்யரான்யபுரத்தில் , தனது பாட்டி வீட்டில் தங்கி உள்ளார், தனியார் ஆயுத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று மாலை பணிமுடிந்து ஏஷ்வந்தாபூர்- மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.அப்போது ரயிலில் பயணித்த நான்கு வாலிபர்கள் ராம்நகரம் ரயில் நிலையம் வந்த போது திவ்யாவிடம்சிலுமிஷம் செய்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்றார். தொடர்ந்து அவரை கற்பழிக்க முயற்சித்தனர். உடனே அவர் அலறி கூச்சலிட்டு போலீசாரிடம் புகார் தெரிவிப்பதாக எச்சரித்தார்.
இதனால் நான்கு வாலிபர்களும் ஆத்திரமடைந்தனர்.கொல்லிடம் பாலம், சிம்ஷகாஆற்றுப்பாலத்தினை ரயில் கடந்து சென்று கொண்டிருந்த போது,நான்கு வாலிபர்களில் ஒருவன்திவ்யாவை பின்புறமாக எட்டி உதைத்தான்.இதில் 25 அடிஉயரத்தில் இருந்து ஆற்றி்ல் கீழே விழுந்தார்..இதில் அவருக்கு தலையிலும், முதுகிலும் பலத்த காயம் ஏற்பட்டது.இ‌தனை மற்றொரு பெட்டியில் பயணித்தவர்கள் பார்த்தனர்..உடனடியாக அப்பெண்ணை மீட்டு மாண்டியா மருத்துவஅறிவியல் மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மைசூரின் கல்யாண்கீர் பகுதியைச் சேர்ந்த அக்பர் (24),இம்ரான் (25),சுபான், அகமது ஆகிய நான்கு பேரை தேடி வந்தனர்.இவர்களில் இருவர் கைது செய்யப்பட்டு மாண்டியா போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இருவரை தேடிவருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.ஓடும் ரயிலில் 19 வயது இளம் பெண்ணை மனபங்கம் செய்ய முயன்ற வாலிபர்கள் அவரை கீழே தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Tuesday, July 24, 2012