Wednesday, July 25, 2012

ஓடும் ரயிலில் இளம் பெண்ணை கீழே தள்ளிவிட்ட வாலிபர்கள்:

பெங்களூரு: கர்நாடகாவில் ஓடும் ரயிலில் 4 வாலிபர்கள் , இளம் பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த அந்த இளம் பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.இது தொடர்பாக 2 இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரைச் சேர்ந்தவர் திவ்யா (19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர், வித்யரான்யபுரத்தில் , தனது பாட்டி வீட்டில் தங்கி உள்ளார், தனியார் ஆயுத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று மாலை பணிமுடிந்து ஏஷ்வந்தாபூர்- மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.அப்போது ரயிலில் பயணித்த நான்கு வாலிபர்கள் ராம்நகரம் ரயில் நிலையம் வந்த போது திவ்யாவிடம்சிலுமிஷம் செய்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்றார். தொடர்ந்து அவரை கற்பழிக்க முயற்சித்தனர். உடனே அவர் அலறி கூச்சலிட்டு போலீசாரிடம் புகார் தெரிவிப்பதாக எச்சரித்தார்.
இதனால் நான்கு வாலிபர்களும் ஆத்திரமடைந்தனர்.கொல்லிடம் பாலம், சிம்ஷகாஆற்றுப்பாலத்தினை ரயில் கடந்து சென்று கொண்டிருந்த போது,நான்கு வாலிபர்களில் ஒருவன்திவ்யாவை பின்புறமாக எட்டி உதைத்தான்.இதில் 25 அடிஉயரத்தில் இருந்து ஆற்றி்ல் கீழே விழுந்தார்..இதில் அவருக்கு தலையிலும், முதுகிலும் பலத்த காயம் ஏற்பட்டது.இ‌தனை மற்றொரு பெட்டியில் பயணித்தவர்கள் பார்த்தனர்..உடனடியாக அப்பெண்ணை மீட்டு மாண்டியா மருத்துவஅறிவியல் மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மைசூரின் கல்யாண்கீர் பகுதியைச் சேர்ந்த அக்பர் (24),இம்ரான் (25),சுபான், அகமது ஆகிய நான்கு பேரை தேடி வந்தனர்.இவர்களில் இருவர் கைது செய்யப்பட்டு மாண்டியா போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இருவரை தேடிவருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.ஓடும் ரயிலில் 19 வயது இளம் பெண்ணை மனபங்கம் செய்ய முயன்ற வாலிபர்கள் அவரை கீழே தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment