Wednesday, July 25, 2012
முகம் எரிந்த நிலையில் வாலிபர் பிணம்
விருத்தாசலம் : கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே குப்பநத்தம், சல்லடை
ஏரியில் இன்று காலை அடையாளம் தெரியாத, 32 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம்
ஒன்று மிதந்துள்ளது. முகத்தை கைலியால் மூடி எரிக்கப்பட்ட நிலையில் அந்த
வாலிபர் பிணம் கிடந்துள்ளது. இதனால் அவர் யார் என்ன என்பது பற்றிய விபரம்
தெரியவில்லை. இதுகுறித்து டி.எஸ்.பி. வெங்கடேசன் மற்றும் இன்ஸ்பெக்டர்
தீராளன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புகையை முகத்தில் ஊதியதால் ஓட ஓட விரட்டி வாலிபர் கொலை
சென்னை: சிகரெட் புகையை முகத்தில் ஊதியவரை ஓட ஓட விரட்டி கொலை செய்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கொருக்குப்பேட்டை, திருநாவுக்கரசு தோட்டம், முதலாவது தெருவை சேர்ந்த
லோகநாதன் மகன் ஸ்ரீதர், 28. சென்னை துறைமுக ஒப்பந்த தொழிலாளி. நேற்று
முன்தினம் மாலை பணி முடித்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் பசுவைய்யன்
தெரு வழியாக வந்தார். பங்க் கடை அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திய
ஸ்ரீதர், சிகரெட் வாங்கி புகைத்துக்கொண்டிருந்தார். அங்கு ராமானுஜம் கூடம்
தெருவை சேர்ந்த குமார், 19, தாமோதரன், 18, சதீஷ், 18 ஆகியோர் டீ குடித்துக்
கொண்டிருந்தனர். ஸ்ரீதர் புகையை இழுத்து டீ குடித்துக்கொண்டிருந்த
வாலிபர்கள் முகத்தில் விட்டதாக கூறப்படுகிறது. இதில் தகராறு ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. கைலாயத்தெருவில் புதிய கட்டடம் கட்டும்
பணி நடந்து கொண்டிருந்தது. அங்கு கிடந்த கட்டைகளை எடுத்து வந்து,
வாலிபர்கள் ஸ்ரீதரை பயங்கரமாகத் தாக்கினர். அவர் தப்பி ஓடினார். வாலிபர்கள்
விட வில்லை. ஓட ஓட விரட்டினர். கட்டையால் சரமாரியாக தாக்கினர். அடி தாங்க
முடியாமல் ஸ்ரீதர் ரத்த வெள்ளத்தில் விழுந்தார். இது குறித்து, அந்த
பகுதிவாசிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்தனர்.
அதற்குள் ஸ்ரீதர் மரணம் அடைந்தார். அவரது உடலை கைப்பற்றி கொருக்குப்பேட்டை
போலீசார், விசாரித்தனர். கொலை வழக்கு தொடர்பாக, குமார், தாமோதரன், சதீஷ்
ஆகியோரை கைது செய்தனர்.ஓடும் ரயிலில் இளம் பெண்ணை கீழே தள்ளிவிட்ட வாலிபர்கள்:
பெங்களூரு: கர்நாடகாவில் ஓடும் ரயிலில் 4 வாலிபர்கள் , இளம் பெண்ணை
மானபங்கம் செய்ய முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை எட்டி
உதைத்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
படுகாயமடைந்த அந்த இளம் பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று
வருகிறார்.இது தொடர்பாக 2 இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரைச் சேர்ந்தவர் திவ்யா (19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர், வித்யரான்யபுரத்தில் , தனது பாட்டி வீட்டில் தங்கி உள்ளார், தனியார் ஆயுத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று மாலை பணிமுடிந்து ஏஷ்வந்தாபூர்- மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.அப்போது ரயிலில் பயணித்த நான்கு வாலிபர்கள் ராம்நகரம் ரயில் நிலையம் வந்த போது திவ்யாவிடம்சிலுமிஷம் செய்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்றார். தொடர்ந்து அவரை கற்பழிக்க முயற்சித்தனர். உடனே அவர் அலறி கூச்சலிட்டு போலீசாரிடம் புகார் தெரிவிப்பதாக எச்சரித்தார்.
இதனால் நான்கு வாலிபர்களும் ஆத்திரமடைந்தனர்.கொல்லிடம் பாலம், சிம்ஷகாஆற்றுப்பாலத்தினை ரயில் கடந்து சென்று கொண்டிருந்த போது,நான்கு வாலிபர்களில் ஒருவன்திவ்யாவை பின்புறமாக எட்டி உதைத்தான்.இதில் 25 அடிஉயரத்தில் இருந்து ஆற்றி்ல் கீழே விழுந்தார்..இதில் அவருக்கு தலையிலும், முதுகிலும் பலத்த காயம் ஏற்பட்டது.இதனை மற்றொரு பெட்டியில் பயணித்தவர்கள் பார்த்தனர்..உடனடியாக அப்பெண்ணை மீட்டு மாண்டியா மருத்துவஅறிவியல் மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மைசூரின் கல்யாண்கீர் பகுதியைச் சேர்ந்த அக்பர் (24),இம்ரான் (25),சுபான், அகமது ஆகிய நான்கு பேரை தேடி வந்தனர்.இவர்களில் இருவர் கைது செய்யப்பட்டு மாண்டியா போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இருவரை தேடிவருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.ஓடும் ரயிலில் 19 வயது இளம் பெண்ணை மனபங்கம் செய்ய முயன்ற வாலிபர்கள் அவரை கீழே தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்தவர் திவ்யா (19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர், வித்யரான்யபுரத்தில் , தனது பாட்டி வீட்டில் தங்கி உள்ளார், தனியார் ஆயுத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று மாலை பணிமுடிந்து ஏஷ்வந்தாபூர்- மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.அப்போது ரயிலில் பயணித்த நான்கு வாலிபர்கள் ராம்நகரம் ரயில் நிலையம் வந்த போது திவ்யாவிடம்சிலுமிஷம் செய்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்றார். தொடர்ந்து அவரை கற்பழிக்க முயற்சித்தனர். உடனே அவர் அலறி கூச்சலிட்டு போலீசாரிடம் புகார் தெரிவிப்பதாக எச்சரித்தார்.
இதனால் நான்கு வாலிபர்களும் ஆத்திரமடைந்தனர்.கொல்லிடம் பாலம், சிம்ஷகாஆற்றுப்பாலத்தினை ரயில் கடந்து சென்று கொண்டிருந்த போது,நான்கு வாலிபர்களில் ஒருவன்திவ்யாவை பின்புறமாக எட்டி உதைத்தான்.இதில் 25 அடிஉயரத்தில் இருந்து ஆற்றி்ல் கீழே விழுந்தார்..இதில் அவருக்கு தலையிலும், முதுகிலும் பலத்த காயம் ஏற்பட்டது.இதனை மற்றொரு பெட்டியில் பயணித்தவர்கள் பார்த்தனர்..உடனடியாக அப்பெண்ணை மீட்டு மாண்டியா மருத்துவஅறிவியல் மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மைசூரின் கல்யாண்கீர் பகுதியைச் சேர்ந்த அக்பர் (24),இம்ரான் (25),சுபான், அகமது ஆகிய நான்கு பேரை தேடி வந்தனர்.இவர்களில் இருவர் கைது செய்யப்பட்டு மாண்டியா போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இருவரை தேடிவருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.ஓடும் ரயிலில் 19 வயது இளம் பெண்ணை மனபங்கம் செய்ய முயன்ற வாலிபர்கள் அவரை கீழே தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
Tuesday, July 24, 2012
Sachin Tendulkar - unseen photos
Sachin Tendulkar in Childhood
Sachin Tendulkar as Musician
Sachin Tendulkar as Bungee Jumping
Sachin Tendulkar as Dancer
Sachin Tendulkar in Party
Sachin Tendulkar as tennis player
Sachin Tendulkar as table tennis player
Sachin Tendulkar as MamaMia
Sachin Tendulkar as Armed Men
Sachin Tendulkar as Captain
Sachin Tendulkar as Musician
Sachin Tendulkar as Bungee Jumping
Sachin Tendulkar as Dancer
Sachin Tendulkar in Party
Sachin Tendulkar as tennis player
Sachin Tendulkar as table tennis player
Sachin Tendulkar as MamaMia
Sachin Tendulkar as Armed Men
Sachin Tendulkar as Captain
Monday, July 23, 2012
"மனைவியை கற்பழிக்க ஆட்கள் தேவை'விளம்பரம் கொடுத்த கணவன் கைது
வாஷிங்டன்:மனைவியை கற்பழிக்க ஆட்கள் தேவை என, விளம்பரம் கொடுத்த கணவனை, அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள ஐடஹோ மாகாணத்தில், இரண்டு வாரங்களுக்கு முன், ஒரு பெண், அடையாளம் தெரியாத நபர், தன்னை கற்பழிக்க முயற்சிப்பதாக, போலீசுக்கு போன் செய்தார். போலீசார் வருவதற்குள், அந்த நபர், அப்பெண்ணிடமிருந்த துப்பாக்கியை பறித்துக் கொண்டு ஓடி விட்டார். இந்நிலையில், இதே பெண்ணிடமிருந்து, போலீசுக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது. மற்றொரு நபர், என்னை கற்பழிக்க முயற்சிக்கிறார்; விரைந்து வாருங்கள் என, கூறினார். போலீசார் சென்ற போது, துப்பாக்கி முனையில், ஒருவனை பிடித்து வைத்திருந்தார் அந்த பெண்.பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரித்த போது, கற்பழிக்க வந்தவர் பெயர் மைக்கேல் கோம்ஸ் என்பது தெரியவந்தது. தனக்கு, இ-மெயில் மூலம், ஒரு விளம்பரம் வந்ததாகவும், அதில், இந்த பெண்ணின் கணவர், தன் மனைவியை கற்பழிக்க, தகுந்த ஆள் தேவை என, கூறியிருந்ததாகவும், மைக்கேல் கோம்ஸ், தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். என் மனைவி எவ்வளவு எதிர்த்தாலும், நின்று விடாதீர்கள். அவளுக்கு கற்பழிக்க முயற்சிக்கும் ஆண்களைத் தான் பிடிக்கும் என, இந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதையடுத்து, அந்த பெண்ணின் கணவரை, போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது, கற்பழிப்பு, கொள்ளை போன்ற பிரிவுகளில், வழக்கு போடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஐடஹோ மாகாணத்தில், இரண்டு வாரங்களுக்கு முன், ஒரு பெண், அடையாளம் தெரியாத நபர், தன்னை கற்பழிக்க முயற்சிப்பதாக, போலீசுக்கு போன் செய்தார். போலீசார் வருவதற்குள், அந்த நபர், அப்பெண்ணிடமிருந்த துப்பாக்கியை பறித்துக் கொண்டு ஓடி விட்டார். இந்நிலையில், இதே பெண்ணிடமிருந்து, போலீசுக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது. மற்றொரு நபர், என்னை கற்பழிக்க முயற்சிக்கிறார்; விரைந்து வாருங்கள் என, கூறினார். போலீசார் சென்ற போது, துப்பாக்கி முனையில், ஒருவனை பிடித்து வைத்திருந்தார் அந்த பெண்.பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரித்த போது, கற்பழிக்க வந்தவர் பெயர் மைக்கேல் கோம்ஸ் என்பது தெரியவந்தது. தனக்கு, இ-மெயில் மூலம், ஒரு விளம்பரம் வந்ததாகவும், அதில், இந்த பெண்ணின் கணவர், தன் மனைவியை கற்பழிக்க, தகுந்த ஆள் தேவை என, கூறியிருந்ததாகவும், மைக்கேல் கோம்ஸ், தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். என் மனைவி எவ்வளவு எதிர்த்தாலும், நின்று விடாதீர்கள். அவளுக்கு கற்பழிக்க முயற்சிக்கும் ஆண்களைத் தான் பிடிக்கும் என, இந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதையடுத்து, அந்த பெண்ணின் கணவரை, போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது, கற்பழிப்பு, கொள்ளை போன்ற பிரிவுகளில், வழக்கு போடப்பட்டுள்ளது.
போக்குவரத்து போலீஸாரிடம் சிக்கிய விஜய்!
சமீபத்தில் சத்யம் தியேட்டரில் ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்
கலந்து கொண்டு, சென்னை - ஆயிரம் விளக்கு அண்ணாசாலை பகுதியில் தனது
பி.எம்.டபிள்யூ காரில் திரும்பினார் இயக்குநர் விஜய். அங்கு சாலையில்
காத்திருந்த போக்குவரத்து போலீஸார் காரை கையை காட்டி நிறுத்தி, அந்த
காஸ்ட்லீகாரின் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த கறுப்பு பலிம் ரோல்களை
அகற்றாமைக்காக அபராதம் போட்டுவிட்டனர். நான் கிரீடம், மதராசப்பட்டினம்,
தெய்வத்திருமகள் படங்களின் இயக்குநர் என விஜய் எவ்வளவோ எடுத்து சொல்லியும்,
எங்கெங்கோ போன் செய்தும் போலீஸார் விடுவதாக இல்லை. கடைசியாக, பைன் தொகையை
கட்டிவிட்டு பி.எம்.டபிள்யூவை கிளப்பி சென்றார் விஜய். பாவம்!
காண்க மேலும் அறிக close ஒரு தோசை விலை ரூ.1.50 தானுங்கோ... ஏ.பி.நாடானூரில் முதியவர் விற்பனை
ஆழ்வார்குறிச்சி:ஏ.பி.நாடானூரில் முதியவர் ரூ.1.50க்கு தோசை விற்று
வருகிறார்.நெல்லை மாவட்டம் கடையம் யூனியனில் பாப்பான்குளம் அருகே ஏ.பி.நாடானூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் வழியாக வள்ளியம்மாள்புரம்
செல்லும் சாலை உள்ளது. இந்த மெயின்ரோட்டில் 80 வயது முதியவர் ஒருவர்
குறைந்த விலையில் தோசை விற்பனை செய்து வருகிறார்.
ஏ.பி.நாடானூர்
மெயின்ரோட்டில் பால்துரை (80) என்பவர் காலை 5 மணிக்கு தனது கடையில் தோசை
தயாரிக்கும் பணியில் ஈடுபடுகிறார். கடந்த 30 நாட்கள் வரை 1 ரூபாய்க்கு தோசை
விற்பனை செய்துள்ளார்.வாடிக்கையாளர்களின் வற்புறுத்தல் காரணமாக தற்போது
ஒரு தோசை ரூ.1.50க்கு விற்பனை செய்து வருகிறார். சுமார் காலை 5 மணியில்
இருந்து இரவு 9.30 மணி வரை விற்பனை நடக்கிறது. ஏராளமான வாடிக்கையாளர்கள்
தினமும் காலையில் குவிகின்றனர்.
ஒரு டீ கூட 6 ரூபாய்க்கு விற்பனை செய்யும்
நிலையில் நீங்கள் தோசையை ரூ.1.50க்கு விற்பனை செய்கிறீர்களே என்று
கேட்டபோது அவர் கூறியதாவது:எனக்கு தற்போது 80 வயது ஆகிறது. எனக்கு மூன்று பெண் குழந்தைகளும், 2 ஆண்
குழந்தைகளும் உள்ளனர். கடந்த 45 ஆண்டுகளாக நான் தோசைக்கடை வைத்துள்ளேன்.
கடந்த 30 நாட்களுக்கு முன்பு வரை ஒரு ரூபாய்க்கு தான் தோசை விற்பனை
செய்தேன். முதுமையின் காரணமாகவும், விலைவாசி ஏற்றத்தாலும், எனது
வாடிக்கையாளர்களின் வற்புறுத்தலாலும் ரூ.1.50க்கு விலை ஏற்றியுள்ளேன்.
மூன்று தோசை சாப்பிட்டாலே போதுமானதாகும். ரூ.4.50ல் காலை டிபனை முடித்து
விடுகின்றனர்.எனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில்
சாம்பார், சட்னி, மிளகுபொடி வைத்து தோசை சப்ளை செய்கிறேன். எனது மனைவி
கோகிலா (70) எனக்கு கடையில் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். நான் தெம்பாக
இருக்கும் வரை உழைப்பேன். எனது குழந்தைகளிடம் இதுவரை நான் எதையும்
எதிர்பார்த்ததில்லை. எனது மூன்று மகள்களையும் இந்த தோசைக்கடையின் மூலம்
வந்த வருமானத்தின் மூலமாகவே திருமணம் செய்து கொடுத்துவிட்டேன். ஆனால்
எனக்கு தமிழக அரசிடம் இருந்து முதியவருக்கு கிடைக்கும் பென்ஷன்
கிடைக்கவில்லை என்பது தான் மிகவும் வருத்தமான விஷயம் என்று வேதனையுடன்
கூறினார்.
காலை நேரத்தில் கிராமப்புறங்களில் இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிள்களில்
வரும் வியாபாரிகள் இவரது கடையில் அமர்ந்து தோசை சாப்பிடுவது வழக்கமாக
உள்ளது. 10 ரூபாய் இருந்தால் போதும் மதியத்திற்கு பார்சலும் வாங்கி
செல்லும் சைக்கிள் வியாபாரிகளும் உள்ளனர். மேலும் இவர் கடந்த சில ஆண்டுகளாக
ரூ.10க்குசாப்பாடு அளித்துள்ளார்.மேலும் இலையில் மட்டுமே பார்சல்
கட்டிக் கொடுக்கும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறார். பாலிதீன் பைகளை
பயன்படுத்தமாட்டேன் என்று கூறுகிறார்.
Saturday, July 21, 2012
ஜனாதிபதி தேர்தல்: ஓட்டு எண்ணிக்கை துவங்கியது
புதுடில்லி:ஜனாதிபதி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. முதலில்
மாநிலங்கள் வாரியாக பதிவான ஓட்டுக்கள் எண்ணப்படுகிறது.இன்று மதியத்திற்குள்
முடிவுகள் தெரிந்துவிடும். எனினும் வெற்றி பிரணாப் முகர்ஜிக்கு தான் என
உறுதியாகியுள்ளது. பிரணாப் முகர்ஜி 70 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற
உள்ளார்.நாட்டின்14-வதுஜனாதிபதியாக அவர் 25-ம தேதி பதவியேற்கிறார்.
ராஜ்யசபா பொதுச்செயலர் அக்னிஹோத்ரி தேர்தல் முடிவுகளை இன்று மதியத்திற்கு
பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறார்.
சம்பளத்தை ரூ.75 லட்சமாக உயர்த்திய எமி ஜாக்சன்..!
ஒரு படம் ஓடி ஹிட்டாகிவிட்டாலே தங்களது சம்பளத்தை உயர்த்திவிடும் நம்மூர்
நடிகர், நடிகையர்களுக்கு மத்தியில் வெளிநாட்டில் இருந்து வந்த எமி ஜாக்சன்
மட்டும் என்ன விதிவிலக்கா...?, அவரும் தனது சம்பளத்தை கணிசமாக
உயர்த்தியுள்ளார். விஜய் இயக்கிய மதராஸபட்டினம் படம் மூலம் தமிழ்
சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். தொடர்ந்து விண்ணைத்தாண்டி
வருவாயா இந்தி ரீ-மேக்கில் நடித்தார். இப்போது மீண்டும் விஜய் இயக்கத்தில்
தாண்டவம் படத்திலும், ஷங்கர் இயக்கும் ஐ படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மதராஸபட்டினம் படத்தில் ரூ.5 லட்சம் சம்பளம் வாங்கிய எமி,
அடுத்து தாண்டவம் படத்தில் ரூ.30-40 லட்சம் சம்பளம் வாங்கினார். இப்போது
அதையும் தாண்டி, ஷங்கரின் ஐ படத்தில் தனது சம்பளத்தை ரூ.75 லட்சமாக
உயர்த்தியுள்ளார்.
பக்க வாத்தியம்
கட்சிக்குள்ளாறவே உருட்டுக்கட்டை தான் பேசுது!
தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில், முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த
தின விழா, சத்தியமூர்த்தி பவனில், சமீபத்தில் கொண்டாடப்பட்டது. விழாவில்,
மாநிலத் தலைவர் ஞானதேசிகன் பேசினார்... காமராஜரின் ஒவ்வொரு பிறந்தநாளின்
போதும், அவர் காலத்தைப் போல, ஆட்சி அமைய வேண்டும் எனப் பேசி விட்டு,
கலைந்து விடுகிறோம். அது பேச்சாக மட்டும் இருக்காமல், அவரது ஆட்சி அமைய,
உறுதி ஏற்க வேண்டும். கன்னியாகுமரியில் நம்ம கட்சி தொண்டருக்கு ஒரு பிரச்னை
ஏற்பட்டால், அவருக்கு ஆதரவாக, சென்னை வரை, காங்கிரசார் போராட்டம் நடத்த
வேண்டும் என்றார். அப்போது, குறும்புக்கார தொண்டர் ஒருவர், சத்தியமூர்த்தி
பவனுக்குள்ளேயே, ஒரு காங்கிரஸ்காரரை, இன்னொரு காங்கிரஸ்காரர்,
உருட்டுக்கட்டையால அடிக்கிறாரு... அதையே நம்மால கட்டுப் படுத்தவோ, தட்டிக்
கேக்கவோ முடியல... அப்பறம் எப்படி மாற்றுக் கட்சிக்காரங்க அடிக்கிறதை,
தட்டிக் கேட்க முடியும்... எனக் கேட்க, காதில் விழாதது போல், ஞானதேசிகன்
வேறு பேச்சுக்கு மாறினார்!வார்த்தை மாறாத அமைச்சர்!
சென்னை மருத்துவக் கல்லூரியில், சமீபத்தில் நடந்த மாணவர்கள் பேரமைப்பு துவக்க விழாவில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் கலந்து கொண்டார். அவர் பேசிய போது, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைக்கு ஈடாக, தரம் உயர்த்தப்படும். தற்போது, பிளஸ் 2 தேர்வு முடிவில், முதல் தர வரிசையில் உள்ள மாணவர்கள் அனைவரும், சென்னை மருத்துவக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இதன் அடிப்படையில், 165 ஆக உள்ள எம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கை, அடுத்த கல்வி ஆண்டு முதல், 250 ஆக உயர்த்தப்படும் என்றார். இதைக் கேட்ட மாணவர்கள், முதல் தர வரிசை மாணவர்கள், இந்தக் கல்லூரியைத் தான் தேர்ந்தெடுப்பர்... இதில் என்ன ஆச்சரியம் இருக்கு... போன வருஷமும் அமைச்சர், இதே மாதிரி, எண்ணிக்கையைக் கூட்டப் போறோம்ன்னு சொன்னாரு... ஆனா, அதுக்கான நடவடிக்கை ஒண்ணத்தையும் காணோம்... வருஷா வருஷம், வார்த்தை மாறாம பேசுறாரு பா... என, கமென்ட் அடித்தனர். சில மாணவர்கள், அமைச்சர் பேச்சுக்கு எதிர்குரல் கொடுக்கவே, செய்வதறியாத அமைச்சர், பேச்சைச் சுருக்கி, சீட்டில் அமர்ந்து விட்டார்!
Tamil Nadu பெஞ்சு
வாழ்க்கையிலே இதெல்லாம் சகஜம்! ஒப்புக்குச் சப்பாணியா,
தேடித் தேடி எடுத்து, லிஸ்ட் கொடுத்துட்டு, இப்ப, முழியோ முழின்னு,
தவிக்கிறாங்கங்க... எனக் கூறியபடி, நாயர் கடையில் வந்தமர்ந்தார்
அந்தோணிசாமி.
அரசுத் துறை விவகாரம் மாதிரி தெரியுதே பா... எனக் கேட்டார் அன்வர்பாய்.அரசு இல்லீங்க... அரசியல்... ஆளுங்கட்சில, ஒருத்தருக்கு ஒரு பதவிங்கிற திட்டத்தை அமல்படுத்த, முடிவு செஞ்சிருக்காங்க... அதுக்காக, அமைச்சர், மாவட்ட செயலர்ன்னு ஒவ்வொருத்தரும், அவங்களுக்கு மாற்றா, மூணு பேர் பட்டியலைக் கொடுத்திருக்காங்க...
தங்களுக்கு பதிலா வர்ற மாவட்ட செயலர்கள், தங்களை மீறக்கூடாது, தங்களோட கையாளா இருக்கணும்ங்கறதுக்காக, ஒப்புக்கு சப்பாணி ஆளுங்களை தேடிப் பிடிச்சு, லிஸ்ட்ல சேர்த்து, கட்சித் தலைமைக்குக் குடுத்துட்டாங்க...
தலைமையோ, பட்டியல்ல இருக்கறவங்களோட பின்னணியை, உளவுத் துறை மூலமா விசாரிச்சு, சரியான ஆளான்னு முடிவு பண்ணிட்டிருக்காங்க... அவங்கவங்க, ரெக்கமண்ட் செஞ்ச ஆளுங்க சரியில்லேங்கற விவரத்தை, தலைமை கண்டுபிடிச்சுடுச்சுன்னா, மாத்து வாங்கணுமேன்னு, முழிக்கிறாங்கங்க... எனக் கூறியபடி, அந்தோணிசாமி பெருமூச்சு விட்டார்.
நன்றி, பாராட்டுல்லாம் தெரிவிச்சு, புதிய கூட்டணியை உருவாக்குறாங்களாம் பா... என, அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.
விவரமா சொல்லுங்க... என்றார் அந்தோணிசாமி.
தமிழகத்துல, ஐ.மு., கூட்டணியைப் பலப்படுத்தணும்னு, தமிழக காங்., தலைவர் ஞானதேசிகன், மாஸ்டர் பிளான் போட்டிருக்காரு... தி.மு.க., அணியில, காங்கிரஸ், தே.மு.தி.க., - பா.ம.க., - மார்க்., கம்யூ., - ம.ம.க., புதிய தமிழகம் கட்சில்லாம் சேர்ந்து, ஒரு அணியா இருக்கணும்னு விரும்புறாரு... அதனால தான் ஜனாதிபதி தேர்தல்ல, பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு கொடுங்கன்னு, விஜயகாந்துக்கு இரண்டு முறை, ஞானதேசிகன் அறிக்கை விட்டாரு...
ராமதாசு, ஜவாஹிருல்லா, கிருஷ்ணசாமின்னு, தலைவருங்களை நேர்ல சந்திச்சு, நன்றி தெரிவிக்கணும்ன்னு, டில்லிலேர்ந்தே, எம்.எல்.ஏ.,க்களுக்கு உத்தரவு போட்டாரு... அதுக்கான வேலை இப்ப, மும்முரமா நடந்திட்டிருக்கு. இது எவ்ளோ தூரம், ஒர்க் அவுட் ஆகப் போகுதுன்னு தெரியலே பா... என விளக்கினார் அன்வர்பாய்.
செங்கோட்டையன் நீக்கத்துல புதிய தகவல் ஏதும் இருக்கா ஓய்... என ஆர்வமாகக் கேட்டார் குப்பண்ணா.
சொல்லுதேன் வே...என ஆரம்பித்தார் அண்ணாச்சி...
மாவட்ட வாரியா ஆய்வுக் கூட்டத்துக்குப் போனபோது, அ.தி.மு.க.,வினர் திரண்டு வந்து, அவரு காலுல விழுந்து ஆசி வாங்குனாவ... போறாத குறைக்கு, கார் ஊர்வலம் வேற நடந்துச்சு... இதெல்லாம், சி.எம்., காதுக்குப் போய்ட்டு...
பதவி இழந்த அன்னிக்கு ராவுல, செங்கோட்டையன் வீட்டுல, 2,000 தொண்டருங்க திரண்டிட்டிருந்தாவ... அவுகள்ள ஒருத்தரு, அண்ணே... உங்களுக்கு இப்படியொரு நிலைமையா...ன்னு கேட்டு வருத்தப்பட்டாரு... உடனே செங்கோட்டையன், அம்மா கொடுத்தாங்க... அம்மாவே எடுத்துட்டாங்க... ஏற்றம், இறக்கம்லாம், வாழ்க்கையில சகஜம் தானே... எனச் சொல்லிக்கிட்டே அழுதுட்டாரு வே... எனக் கூறி, அண்ணாச்சி எழுந்து நடந்தார்; மற்றவர்களும் நடையைக் கட்ட, பெஞ்சில் மற்றவர்கள் வந்தமர்ந்தனர்.
கள்ளக்காதலியின் கணவரை கொலை செய்த வாலிபர் கைது
கிருஷ்ணகிரி: ஊத்தகரை அருகே கள்ளக்காதலியின் கணவரை கொலை செய்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
ஊத்தங்கரை அடுத்தசின்னதள்ளப்பாடியை சேர்ந்த விவசாயி சுபாஷ் ,32 இவரது மனைவி தீபா, 27. இவருக்கும் சின்னதள்ளப்பாடியை சேர்ந்த பகீதரன், 27 என்பவருக்கும் கடந்த ஐந்தாண்டாக கள்ளத்தொடர்பு இருந்தது.இது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. சுபாஷ் தனது குடும்பத்துடன் தனது மனைவியின் ஊரான சிங்காரப்பேட்டை அருகில் உள்ள காந்திநகருக்குகடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் குடியேறினார்.ஆனாலும், தீபாவின் கள்ளக்காதல் தொடர்ந்தது. தீபாவும், பகீதரன் மற்றும் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து சுபாஷை கடந்த 14ம் தேதி மிட்டப்பள்ளியில் கொலை செய்து அப்பகுதியில் இருந்த கிணற்றில் வீசி சென்றனர். ஊத்தங்கரை போலீஸார்சுபாஷின் மனைவி தீபாவை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் படி பகீரதனை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
ஊத்தங்கரை அடுத்தசின்னதள்ளப்பாடியை சேர்ந்த விவசாயி சுபாஷ் ,32 இவரது மனைவி தீபா, 27. இவருக்கும் சின்னதள்ளப்பாடியை சேர்ந்த பகீதரன், 27 என்பவருக்கும் கடந்த ஐந்தாண்டாக கள்ளத்தொடர்பு இருந்தது.இது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. சுபாஷ் தனது குடும்பத்துடன் தனது மனைவியின் ஊரான சிங்காரப்பேட்டை அருகில் உள்ள காந்திநகருக்குகடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் குடியேறினார்.ஆனாலும், தீபாவின் கள்ளக்காதல் தொடர்ந்தது. தீபாவும், பகீதரன் மற்றும் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து சுபாஷை கடந்த 14ம் தேதி மிட்டப்பள்ளியில் கொலை செய்து அப்பகுதியில் இருந்த கிணற்றில் வீசி சென்றனர். ஊத்தங்கரை போலீஸார்சுபாஷின் மனைவி தீபாவை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் படி பகீரதனை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
அண்ணன், தம்பியை தாக்கிய ஒருவர் கைது
கள்ளக்குறிச்சி : அண்ணன், தம்பியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரைபோலீசார் கைது செய்தனர்.
வரஞ்சரம் அடுத்த கொட்டையூர் காலனியை சேர்ந்த அன்பழகன் மகன் ஏழுமலை, 24. இவர் நேற்று முன்தினம் இரவு கொட்டையூரில் உள்ளபெட்டிக்கடை முன்
நின்றிருந்தார். அங்கு வந்த தங்கவேல் மகன் உத்திரகுமரன், 35, என்பவரிடம்
சிகரெட் வாங்கித்தருமாறு ஏழுமலை கேட்டார். அதற்கு உத்திரகுமரன்
மறுத்துவிட்டதால் ஏழுமலை அவரைதிட்டினார். ஆத்திரமடைந்தஉத்திரகுமரன்,
ஏழுமலையை தடியால் தாக்கியுள்ளார். இதனை தடுக்க முயன்ற ஏழுமலையின் தம்பி
மணிகண்டனையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து உத்திரகுமரனை கைது செய்தனர்.
Friday, July 20, 2012
ஓபாமாவை கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது
பிர்மிங்ஹாம் : அமெரிக்க அதிபர் பாரக் ஓபாமாவை கொல்ல சதித்திட்டம்
தீட்டியதாக உஜ்பெகிஸ்தான் நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உஜ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் உலுக்பெக் கொடிரோவ், 22 வயதான இவர்,
அதிபர் ஓபாமாவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக கைது
செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 30 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை
விதிக்கப்டலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேலைக்குச் செல்லாததை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை
கடலூர்:தாய் திட்டியதால் விரக்தியடைந்த வாலிபர் தற்கொலை செய்து
கொண்டார்.கடலூர் அடுத்த வரக்கால்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன்
மகன் குணா என்கிற குணசேகரன், 23. இவர் நேற்று முன்தினம் வேலைக்குச்
செல்லாமல் வீட்டில் இருந்தார். அதனை அவரது தாய் கண்டித்தார். அதில்
விரக்தியடைந்த குணா, அரளி விதையை அரைத்து குடித்து மயங்கி விழுந்தார்.
ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர்
நேற்று காலை இறந்தார். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரித்து
வருகின்றனர்.
வயிற்று வலியால் ஒருவர் தற்கொலை
புவனகிரி : வயிற்று வலி கொடுமையால் மனமுடைந்தவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
புவனகிரியை அடுத்த கீரப்பாளையம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 40. இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வந்தது. நேற்று முன்தினம்
இரவு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த வெங்கடேசன் வீட்டில்
இருந்த பூச்சி மருந்தை குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரி
ஜிப்மர் மருத்
துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.இது குறித்த புகாரின்
பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மாணவனை சிறுநீர் குடிக்க வைத்த கொடுமை ; 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
பெரம்பலூர்:பெரம்பலூர் அருகே உள்ள அகரம்சீகூர் சிறுமலர்
மேல்நிலைப்பள்ளியில் படித்த ஒன்பதாம் வகுப்பு மாணவனை ஆசிரியர்கள் மூன்று
பேர் சிறுநீர் குடிக்க வைத்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவன்
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று
வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா பட்டீஸ்வரம் அருகே உள்ள சோழன்மாளிகை கிராமத்தை சேர்ந்தவர் தேசிங்குராஜன்-பூங்கொடி தம்பதிகளின் மகன் பரத்ராஜ் (14). இவர் பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை ஆசிரியர்கள் விடுதி மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் அமர வைத்து படிக்க வைத்ததாக தெரிகிறது. அப்போது ஆசிரியர்கள் கருப்பையா, ராஜா உட்பட மூன்று ஆசிரியர்கள் மாணவர்கள் படிப்பதை கண்காணித்தனர். அப்போது பரத்ராஜூக்கு சிறுநீர் வந்தததால் ஆசிரியரிடம் சிறுநீர் கழித்துவிட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அதற்கு ஆசிரியர்கள் இப்பொழுதுதான் படிப்பதற்கு உட்கார்ந்த அதற்கு சிறுநீர் வருகிறதா என்று கூறி பரத்ராஜ் சிறுநீர் கழிப்பதற்கு அனுமதி மறுத்தனர்.
இதைத்தொடர்ந்து சிறுநீர் கழித்து வர அனுமதிக்குமாறு பரத்ராஜ் ஆசிரியரிடம் மீண்டும் கேட்டார். அப்போது சிறுநீரை அதே இடத்தில் கழிக்க வைத்ததுடன் அடித்து உதைத்து பரத்ராஜை சிறுநீர் குடிக்க வைத்தாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன பரத்ராஜ் விடுதியிலிருந்து தப்பித்து தனது சொந்த ஊரான சோழன்மாளிகைக்கு சென்று இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து பரத்ராஜை அவரது பெற்றோர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் நேற்று மாலை சிகிச்சைக்காக சேர்த்தனர். ஒன்பதாம் வகுப்பு மாணவனை ஆசிரியர்கள் மூன்று பேர் சேர்ந்து சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விசாரணை துவக்கம்: தனியார் பள்ளியில், மாணவனுக்கு சிறுநீர் குடிக்க வைத்த விவகாரத்தில், பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட 3 ஆசிரியர்களையும் சஸ்பெண்டு செய்துள்ள நிலையில் இதுகுறித்த விசாரணையை, மாவட்ட கல்வி அதிகாரி தலைமையிலான அதிகாரிகள் துவக்கியுள்ளனர். இந்நிலையில் 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா பட்டீஸ்வரம் அருகே உள்ள சோழன்மாளிகை கிராமத்தை சேர்ந்தவர் தேசிங்குராஜன்-பூங்கொடி தம்பதிகளின் மகன் பரத்ராஜ் (14). இவர் பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை ஆசிரியர்கள் விடுதி மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் அமர வைத்து படிக்க வைத்ததாக தெரிகிறது. அப்போது ஆசிரியர்கள் கருப்பையா, ராஜா உட்பட மூன்று ஆசிரியர்கள் மாணவர்கள் படிப்பதை கண்காணித்தனர். அப்போது பரத்ராஜூக்கு சிறுநீர் வந்தததால் ஆசிரியரிடம் சிறுநீர் கழித்துவிட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அதற்கு ஆசிரியர்கள் இப்பொழுதுதான் படிப்பதற்கு உட்கார்ந்த அதற்கு சிறுநீர் வருகிறதா என்று கூறி பரத்ராஜ் சிறுநீர் கழிப்பதற்கு அனுமதி மறுத்தனர்.
இதைத்தொடர்ந்து சிறுநீர் கழித்து வர அனுமதிக்குமாறு பரத்ராஜ் ஆசிரியரிடம் மீண்டும் கேட்டார். அப்போது சிறுநீரை அதே இடத்தில் கழிக்க வைத்ததுடன் அடித்து உதைத்து பரத்ராஜை சிறுநீர் குடிக்க வைத்தாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன பரத்ராஜ் விடுதியிலிருந்து தப்பித்து தனது சொந்த ஊரான சோழன்மாளிகைக்கு சென்று இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து பரத்ராஜை அவரது பெற்றோர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் நேற்று மாலை சிகிச்சைக்காக சேர்த்தனர். ஒன்பதாம் வகுப்பு மாணவனை ஆசிரியர்கள் மூன்று பேர் சேர்ந்து சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விசாரணை துவக்கம்: தனியார் பள்ளியில், மாணவனுக்கு சிறுநீர் குடிக்க வைத்த விவகாரத்தில், பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட 3 ஆசிரியர்களையும் சஸ்பெண்டு செய்துள்ள நிலையில் இதுகுறித்த விசாரணையை, மாவட்ட கல்வி அதிகாரி தலைமையிலான அதிகாரிகள் துவக்கியுள்ளனர். இந்நிலையில் 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் மர்ம மனிதன் துப்பாக்கிச்சூடு; சினிமா பார்த்து கொண்டிருந்த 15 பேர் பலியாயினர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் சினிமா பார்த்துக்கொண்டிருந்த
போது மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான் இதில் 15 பேர்
சம்பவ இடத்திலேயே இறந்து போயினர். 50 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.
இதில் பெரும் பொறுப்பில் இருந்த அதிகாரிகள் சிக்கி இறந்து போயினர் என
கூறப்படுகிறது.
அமெரிக்காவின் கொலரோடாவின் டென்வர் அரோரா பகுதியில் ஒரு திரையரங்கில்
பேட்மேன் ( தி டார்க் நைட் ரைடர்ஸ் ) என்ற திரைப்படம் முதல் காட்சி
ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. இந்நேரத்தில் முகத்திரை மூடி வந்த மர்ம மனிதன்
கையில் துப்பாக்கியுடன் வந்தான். சினிமா பார்த்துக்கொண்டிருந்தவர்களை
நோக்கி சரமாரியாக சுட்டான். அனைவரும் அலறியபடி தப்பி ஓடினர். இதில்
துப்பாக்கி குண்டுகளுக்கு 15 பேர் இரையாயினர். 50 க்கும் மேற்பட்டோர்
காயமுற்றனர்.இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மர்ம மனிதருக்கு 20 வயது இருக்கும் என தெரிகிறது. இவனை போலீசார் கைது செய்திருப்பதாக உறுதி செய்ப்படாத தகவல் தெரிவிக்கிறது. பயங்கரவாதியாக இருக்குமோ என போலீசார் சந்தேகிக்கின்றனர். துபபாக்கி சூடு நடத்தியதன் நோக்கம் இன்னும் போலீசாரால் அறிய முடியவில்லை. விசாரிக்கப்பட்டு வருகிறது.சம்பவ இடத்தில் 10 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் காயமுற்றவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபடி இருக்கின்றன. பலரும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது. தியேட்டர் வளாகம் முழுவதும் ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஏன் சுட்டான் ? எப்படி சுட்டான் ? : இந்த சம்பவத்தில் உயிர் பிழைத்த ஒருவர் கூறுகையில்: அதிகாலை 12. 25 மணியளவில் படம் பார்த்துக்கொண்டிருந்த போது அரங்கமே முழு இருட்டாக இருந்தது. இந்நேரத்தில் பலத்த சப்தம் கேட்டது. அரங்கம் முழுவதும் ஒரே புகை மண்டலமானது. இந்த அதிர்ச்சியில் உறைந்த சில நிமிடத்திலேயே துப்பாக்கிகளில் இருந்து குண்டுகள் கிளம்பின. அலறியபடி எங்கும் யாரும் தப்ப முடியவில்லை. பலரும் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து விழுந்தனர்.
மகன் கொலை செய்ததை மறைத்த, "மாஜி' டி.எஸ்.பி.,:தலைமறைவானவரை தேடுகிறது போலீஸ்
ப.வேலூர்:மனைவியை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய பேராசிரியர் கணவன்
மற்றும் அவரது குடும்பத்தினரை, பின்னால் இருந்து, இயக்கிய மாஜி போலீஸ், டி.எஸ்.பி., சின்னப்பன்மீது, பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தலைமறைவாக உள்ள அவரை, தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சென்னையில், தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய
நடராஜன், மனைவி விஜயலட்சுமியை கொலை செய்த விவகாரத்தில், புதிய தகவல்கள்
அடிப்படையில் போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.கொலையை மறைப்பதற்கு, அனைத்து
உதவிகளையும், ஆலோசனைகளையும், மாஜி போலீஸ், டி.எஸ்.பி., சின்னப்பன்
வழங்கியுள்ளார்.
நடராஜனை, பரமத்தி போலீசார் விசாரணை செய்த போது, அங்கு
சென்று தன்னை, மாஜி டி.எஸ்.பி., என்று அறிமுகப்படுத்திக்
கொண்டுள்ளார்.மேலும், போலீஸ் ஸ்டேஷனில் இருந்து நடராஜனை வலுக்கட்டாயமாக
அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து தலைமறைவாக காரணமாக
இருந்துள்ளார்.மாஜி டி.எஸ்.பி., சின்னப்பன் சொல்படியே, நடராஜன் மற்றும்
அவரது குடும்பத்தினர் நடந்து கொண்டுள்ள சின்னப்பன், நடராஜனுக்கு சித்தப்பா
முறை உறவு என்பது குறிப்பிடத்தக்கது.கொலை செய்துவிட்டு, நகைகளுடன் ஊர்
திரும்பிய நடராஜன், இது குறித்து தன் பெற்றோரிடம், தன் சித்தப்பா, மாஜி
டி.எஸ்.பி., சின்னப்பனிடம்விவரங்களைத் தெரிவித்தார் என்பதும் விசாரணையில்
தெரிய வந்துள்ளது.மாஜி டி.எஸ்.பி., சின்னப்பன் மீது போலீசார் வழக்கு
பதிந்து, தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.
பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுர்வேத டாக்டர்கள்:திருச்சியில் சென்னை போலீஸ் விசாரணை
திருச்சி: சென்னையில் நர்ஸ் வேலைக்கு வந்த, கேரள இளம்பெண்ணை பாலியல்
பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கிய ஆயுர்வேத மருத்துவர்களை, திருச்சியில் உள்ள ஆயுர்வேத மசாஜ் சென்டர் மற்றும் ஆயுர்வேத மருத்துவமனையில் பதுங்கி
உள்ளனரா என, சென்னை போலீசார் சோதனை நடத்தினர்.
சென்னை, அண்ணா நகர் திருமங்கலத்தில் கேரளாவைச் சேர்ந்த ஆயுர்வேத
மருத்துவர்கள் அஜீல்குமார், ஷாஜித் ஆகிய இருவரும் ஆயுர்வேத மருத்துவமனை
நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன் அங்கு நர்சாக வேலைபார்க்க வந்த
ராணி,19,என்ற பெண்ணை, இரு மருத்துவர்களும் சேர்ந்து, கத்தியைக் காட்டி
மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். வெளியில் சொன்னால் கொலை
செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
அதன்பின் அங்கிருந்து இருவரும் தலைமறைவாகி விட்டனர். பலாத்காரம்
செய்யப்பட்ட நர்ஸ் ராணி, சென்னையில் உள்ள தன் உறவினர்கள் மூலம் முகப்பேர்
கிழக்கு போலீசில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், நர்சை
பாலியல் பலாத்காரம் செய்து, கொலை மிரட்டல் விடுத்து தலைமறைவான, இரு
மருத்துவர்களையும் தேடி வந்தனர்.
இந்நிலையில் மருத்துவர் அஜில்குமார்,
திருச்சி தில்லை நகரில் ஆயுர்வேத மசாஜ் சென்டரும், தென்னூரில் ஆயுர்வேத
மருத்துவமனையும் நடத்தி வருவது போலீசாருக்கு தெரியவந்தது.நேற்று மாலை
சென்னை போலீசார் திருச்சி வந்து, தில்லை நகர் மற்றும் தென்னூரில் உள்ள
மருத்துவர் அஜீல்குமார் மருத்துவமனைகளில் விசாரணை நடத்தினர்.இச்சம்பவம்
தில்லை நகர், தென்னூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலியல்
பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கிய மருத்துவர் அஜீல்குமார் தில்லை நகரில்
நடத்தி வரும் மசாஜ் கிளப்பில், சட்டவிரோத செயல்களில் ஏதும் ஈடுபட்டாரா
என்பது குறித்தும், திருச்சியில் அவர் நடத்தி வரும் மருத்துவமனைகளில் ஏதும்
சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும், சென்னை போலீசார்
விசாரித்துள்ளனர்.
அமெரிக்காவின் மன்மோகன்சிங்கா ஒபாமா?
புதுடில்லி : அமெரிக்காவின் டைம் பத்திரிகை, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்
குறித்து அட்டைப்பட செய்தி வெளியிட்டிருந்த நிலையில், இந்தியாவிலிருந்து
வெளிவரும் அவுட்லுக் பத்திரிகை, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின்
நிர்வாகத்திறமை குறித்து அட்டைப்பக்க செயதி வெளியிட்டு பழிதீர்த்துள்ளது.
அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவுட்லுக்
பத்திரிகையின் இந்த செய்தி, பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுட்லுக்
பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ஒபாமாவிற்கு நிர்வாகத்திறமை இல்லை
என்றும், மீண்டும் ரீபூட் செய்ய வேண்டும் என்று அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமிக்கு நடந்த திருமணம் : தந்தை உள்ளிட்ட 5 பேர் கைது
தர்மபுரி: தர்மபுரி அருகே சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தந்தை,
திருமணம் செய்த வாலிபர் உள்ளிட்ட ஐந்து பேரை, போலீஸார் கைது செய்தனர்.தர்மபுரி அடுத்த முக்கல்நாய்க்கன்பட்டி, மேல் ராஜாதோப்பு பகுதியை
சேர்ந்தவர் கூலி தொழிலாளி கோவிந்தசாமி. இவரது மனைவி செல்வி. இவர்களது மகள்
தனஸ்ரீ, 16 (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
ஏழு ஆண்டுகளாக, செல்வி, கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
கோவிந்தசாமி, ரேவதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். கடந்த 1ம்
தேதி, தனஸ்ரீயை, ரேவதியின் தம்பி கார்த்திக் (21) என்பவருக்கு, கோவிந்தசாமி
திருமணம் செய்து வைத்தார்.
இது குறித்து அறிந்த செல்வி, எஸ்.பி., அமீத்குமார் சிங்கிடம் புகார்
செய்தார். புகார் குறித்து விசாரிக்க, தர்மபுரி அனைத்து மகளிர்
போலீஸாருக்கு எஸ்.பி., உத்தரவிட்டார். போலீஸார் நடத்திய விசாரணையில்,
தனஸ்ரீக்கு திருமணம் நடந்தது உறுதி செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் தேவிகாராணி தலைமையிலான போலீஸார், கர்நாடகா மாநிலம்
கர்காலாவில் தங்கியிருந்த தனஸ்ரீ மற்றும் கார்த்திக்கை மீட்டு வந்தனர்.
தனஸ்ரீ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தர்மபுரி குறிஞ்சி நகரில் உள்ள
குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
இளம் வயது திருமணம் செய்து வைத்தது தொடர்பாக, கோவிந்தசாமி, கார்த்திக்
மற்றும் உறவினர்கள் நரசிம்மன், கிருஷ்ணன், பெருமாள் ஆகிய ஐந்து பேரையும்,
போலீஸார் கைது செய்தனர்.
7 things women do that drive men mad
Annoying female habit 1: Making an anniversary out of everything
What is it with women turning the nice little things in life into a grand gift-exchanging, champagne-popping ceremony? We return home from a normal day at work to be met with a candle-lit dinner and an expensive looking gift but, quite frankly, it makes our heart stop. Have you done something wrong? Is it your birthday? My birthday? Oh silly me, it’s the anniversary of the first time we looked at each other. Please refrain from doing this, ladies. We have a hard enough time getting event dates right without being shouted at for not buying the dog a card to celebrate the anniversary of his first vaccination.Annoying female habit 2: Piling the bed with cushions
One would be mistaken for thinking that a bed is for sleeping in. We go to get our head down for the night, only to find the bed piled sky-high with strategically placed cushions that leave no room for us. What’s more, only a couple of these cushions actually have a purpose. We don’t need the tiny heart-shaped one or the big fluffy one that makes us sneeze – just a normal pillow to rest our head on will suffice. We don’t adorn the bed with DIY tools and model cars, so please tame your OCD (Obsessive Cushion Disorder) and stop making an elaborate display out of our bed so we can get down to the important stuff.The Obama Deception (FULL)
The Obama Deception is a hard-hitting film (below) that completely
destroys the myth that Barack Obama is working for the best interests of
the American people. The video details how Obama is a con man and what
the real power behind him is. The Obama marketing campaign becomes clear
to the ungullable.
The Obama phenomenon is a hoax carefully crafted by the captains of the New World Order. He is being pushed as savior in an attempt to con the American people into accepting global slavery.
We have reached a critical juncture in the New World Order’s plans. It’s not about Left or Right: it’s about a One World Government. The international banks plan to loot the people of the United States and turn them into slaves on a Global Plantation.
Covered in this film: who Obama works for, what lies he has told, and his real agenda. If you want to know the facts and cut through all the hype, this is the film for you.
The Obama phenomenon is a hoax carefully crafted by the captains of the New World Order. He is being pushed as savior in an attempt to con the American people into accepting global slavery.
We have reached a critical juncture in the New World Order’s plans. It’s not about Left or Right: it’s about a One World Government. The international banks plan to loot the people of the United States and turn them into slaves on a Global Plantation.
Covered in this film: who Obama works for, what lies he has told, and his real agenda. If you want to know the facts and cut through all the hype, this is the film for you.
முதல்வர் கையெழுத்துடன் போலி கடிதம் தயாரித்தவர் கைது : சிக்க வைத்த "ஆங்கில' கையெழுத்து
சென்னை: ஆசிரியை மாறுதலுக்கு, முதல்வரின் கையெழுத்துடன் கூடிய கடிதத்தை,
போலியாக தயாரித்த அச்சக உரிமையாளர் மற்றும் போலி அரசு முத்திரை தயாரித்து
கொடுத்தவர் கைது செய்யப்பட்டனர்.சென்னை ராயப்பேட்டை, சுபேதார் உசேன்
தெருவில் அச்சகம் நடத்தி வருபவர் பிரின்சி எட்வின், 42; கன்னியாகுமரி
மாவட்டத்தைச் சேர்ந்தவர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியை
பமீலா, சிவகங்கை மாவட்டம் நும்பையூர் அரசு பள்ளியில், ஆங்கில ஆசிரியையாக
பணியாற்றி வருகிறார்.சொந்த மாவட்டத்திற்கு பணி மாறுதல் பெற, தலைமைச்
செயலகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் நுங்கம்பாக்கத்தில் பள்ளி கல்வித்துறை
அதிகாரிகளிடம், பமீலா மனு கொடுத்தார். அவரது முயற்சி தோல்வியடைந்ததால்,
சென்னையில் வசித்து வரும் பிரின்சி எட்வினை தொடர்பு கொண்டார். ஆசிரியை பணி
மாறுதல் பெற்றுத் தருவதாக, பிரின்சி எட்வின் கூறியுள்ளார்.ஆங்கில
கையெழுத்து :ஆசிரியை பமீலா, பணி மாறுதல் வேண்டி தலைமைச் செயலகத்தில் உள்ள,
முதல்வர் தனிப்பிரிவில் கொடுத்த மனுவின் நகலை வாங்கிய பிரின்சி எட்வின்,
அதில், பச்சை நிறத்தில், முதல்வரின் கையெழுத்தை ஆங்கிலத்தில் போட்டு,
போலியான கடிதத்தை தயாரித்தார்.அதை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி
கல்வித்துறை அலுவலகத்திற்கு தபாலில் அனுப்பினார். அரசு முத்திரையிடப்பட்ட
கவரில் வந்த அக்கடிதத்தை, கடந்த, 10ம் தேதி, பள்ளி கல்வித்துறை இயக்குனர்
மணி, பிரித்துப் பார்த்தார்.அதில், பார்வேர்டு என பச்சை நிறத்தில்,
முதல்வரின் கையெழுத்து ஆங்கிலத்தில் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே,
முதல்வர் ஜெயலலிதா, தமிழில் கையெழுத்திட்டு வருவதால், சந்தேகமடைந்த
இயக்குனர் மணி, முதல்வரின் தனிப்பிரிவில் விசாரித்தார். அப்போது தான்
முதல்வரின் கையெழுத்தை, போலியாக ஒருவர் போட்டிருப்பது
அம்பலமானது.கமிஷனரிடம் புகார் : இதுகுறித்து, கோட்டையில் உள்ள ஐ.ஏ.எஸ்.,
அதிகாரி சபீதா, கமிஷனர் திரிபாதியிடம் பேசி, மோசடி நபர் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டுமென தெரிவித்தார். இதற்கிடையே, முதல்வர் தனிப்பிரிவில்
இருந்து கடிதம் அனுப்பிய நபரை பற்றிய எந்த தகவலும் இல்லை. ஆசிரியை
பமீலாவிடம், கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்தபோது, பணி மாறுதல் வேண்டி
நான் யாரிடமும் மனு கொடுக்கவில்லை என்றார்.வலிய வந்து... :இந்நிலையில்,
நேற்று முன்தினம் பிரின்சி எட்வின், பள்ளி கல்வித்துறை வளாகத்திற்குச்
சென்றார். அங்குள்ள அதிகாரிகளிடம், நான் முதல்வரின் தனிப் பிரிவில் இருந்து
வருகிறேன். முதல்வர் தனிப்பிரிவில் இருந்து, ஆசிரியை பணி மாறுதல் தொடர்பாக
அனுப்பப்பட்ட கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என,
அதட்டலாக கேட்டார்.கொஞ்சம் காத்திருங்கள்; விசாரித்து உடனே நடவடிக்கை
எடுக்கிறோம் என கூறிய, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், முதல்வரின்
தனிப்பிரிவிற்கு போன் செய்து விவரத்தைக் கூறினர்.இருவர் கைது :அது போன்று
எந்தநபரையும் நாங்கள் அனுப்பவில்லை எனக் கூறிய முதல்வர் தனிப்பிரிவு
அதிகாரிகள், அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைக்கும்படி
கூறினர்.நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் சரவணன், அவரிடம் விசாரணை நடத்தினார்.
ராயப்பேட்டை பகுதியில் நடத்தி வந்த அச்சகத்திலும், போலீசார் சோதனை நடத்தி
கம்ப்யூட்டரை பறிமுதல் செய்தனர். @மலும்,போலி பரிந்துரைக் கடிதம் தயாரித்த
பிரின்சி எட்வின், @பாலி அரசு முத்திரை தயாரித்து கொடுத்த, ராயப்பேட்டையைச்
சேர்ந்த முரளி, 43,போலீசார் கைது செய்தனர். இதுவரை எத்தனை பேருக்கு, இது
போன்று போலியாக கடிதங்களை தயாரித்து கொடுத்து, அரசு பணியில் மாறுதல்
பெற்றுத் தந்தார் என்ற விவரங்களை, போலீசார் சேகரிக்கின்றனர்.
Tamil Nadu பெஞ்சு
மறுபடி உங்களைக் கூப்பிடுவேன்! முதல்வர் எடுத்த,
டிரில்லுல எம்.எல்.ஏ.,க்கள், அரண்டு போயிட்டாவ வே... என, விவாதத்தை சுடச்
சுடத் துவக்கினார் பெரியசாமி அண்ணாச்சி.
விவரமா சொல்லு பா... என்றார் அன்வர்பாய்.ஜனாதிபதி தேர்தல்ல, எப்படி ஓட்டு போடணும்னு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, செயல்முறை விளக்கம் நடந்துது இல்லியா... அது முடிஞ்சதும், கூட்டம் கலைஞ்சுடும்ன்னு எதிர்பார்த்தாவ... ஆனா முதல்வர், எம்.எல்.ஏ.,க்கள் மேலே புகார் படிக்க ஆரம்பிச்சாங்க... தப்புத் தண்டா பண்ணினவங்க யாருன்னு சொல்லாமலேயே, பொத்தாம் பொதுவா கண்டிச்சாங்க...
ஒரு கட்டத்துல, நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்னு ஆவேசமா பேசினாங்க... எம்.எல்.ஏ.,க்கள் யாரும், அம்மா மொகத்துல இப்படியொரு கோபத்தை பார்த்தது இல்லே... அரண்டு போய்ட்டாவ... யாரு யாரு, என்னென்ன தப்பு செஞ்சிருக்கீங்கன்னு விளக்க, மறுபடி உங்களைக் கூப்ட்டு பேசுவேன்னு எச்சரிக்கை விட்டுட்டு, கிளம்பிப் போய்ட்டாங்க... என, மூச்சிரைக்கக் கூறி முடித்தார் அண்ணாச்சி.
ஈரோடு அமைச்சரு, குஷில இருக்காரு பா... என, அடுத்த தகவலைத் துவக்கினார் அன்வர்பாய்.
இங்கே பாரும்... மழை பெய்யறது... நல்ல காரமான தகவலைச் சொல்லும்... சொதப்பக் கூடாது... என, கண்டிஷன் போட்டார் குப்பண்ணா.
ஈரோடுலேர்ந்து ராமலிங்கம், பொதுப்பணித் துறை அமைச்சரா இருக்காரு... அவருக்கும், இப்ப, ஆட்சி - கட்சிப் பதவியை இழந்த செங்கோட்டையனுக்கும், ஏழாம் பொருத்தம்... அவரு, சில பல தகவல்களை, மேலிடத்துக்குச் சொன்னது தான், செங்கோட்டையனோட இந்த கதிக்குக் காரணம்ன்னு சொல்றாங்க... இன்னும் எத்தனை பேருக்கு, ஏழரை பிடிக்கப் போகுதோ தெரியலே...
முந்தா நாள் ராத்திரி, மாவட்ட செயலர் யாரும், அங்க இங்க அசையக் கூடாதுன்னு, முதல்வர் உத்தரவு போட்டிருந்தாங்க... அதுக்கும் என்ன காரணம்ன்னு தெரியலே... என அன்வர்பாய் கூற, கார மிளகாயைக் கடித்தவராய், குப்பண்ணாவுக்கு விக்கல் எடுத்தது.
டில்லில, காங்கிரஸ் எம்.பி.,க்களுக்கு, தடபுடல் விருந்து கொடுத்தாங்க... நம்ம ஊரு தலைவருக்கு தான், கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாம போயிடிச்சுங்க... என, கடைசி மேட்டரைத் துவக்கினார் அந்தோணிசாமி. இத்தகவலைக் கேட்டதும், குப்பண்ணாவுக்கு விக்கல் நின்றது... எதுக்கு ஓய் விருந்து... எனக் கேட்டார்.
ஜனாதிபதி தேர்தலை ஒட்டி, காங்கிரஸ் எம்.பி.,க்கள், மத்திய அமைச்சர்கள், கட்சியின் முன்னணித் தலைவர்கள்ன்னு, 500 பேருக்கு டில்லி, அசோகா ஓட்டல்ல, கட்சி மேலிடத்து மேடம் விருந்து கொடுத்தாங்க... பிரதமர் மன்மோகன் சிங், ராகுல்ன்னு, வி.ஐ.பி., பட்டாளமே இருந்துச்சு... விருந்தினர்களை, மாநில வாரியா பிரிச்சு, சைவம் தனியாவும், ஊர்வன, பறப்பனன்னு தனியாவும் பரிமாறினாங்க... ஞானதேசிகனுக்கு, நெம்பர் 2 பிரச்னை... அதனால, வெறுந்தண்ணியக் குடிச்சு, டாய்லெட்டும், நடையுமா இருந்தாருங்க... என, அந்தோணிசாமி விளக்கிக் கொண்டிருந்த நேரத்தில், மிளகாய் காரமும், டீ குடித்த கலக்கமுமாய், வயிறைப் பிடித்தபடியே, வேகமாக வெளியேறினார் குப்பண்ணா. மற்றவர்கள், மசால் வடையை ருசித்துக் கிளம்பினர்!
அரசு டாக்டரை தாக்கிய அ.தி.மு.க., பிரமுகர் கைது
ஓசூர்: ஓசூர் அரசு மருத்துவமனையில், இரவு பணி டாக்டரை சட்டையை பிடித்து
இழுத்து, கீழே தள்ளி கலாட்டா செய்த,அ.தி.மு.க., பிரமுகரை போலீஸார்கைது
செய்தனர்.
ஓசூர் அரசு மருத்துவமனையில் நேற்று முன் தினம் இரவு, அறுவை சிகிச்சைட டாக்டர் செந்தில், 38, பணியில் இருந்தார்.இரவு 10.30 மணிக்கு விபத்தில் காயமடைந்த இருவரை பாரதிதாசன் நகரை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் சுதர்சன்யாதவ், 40, சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.
டாக்டர் செந்தில் இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து ஒருவரை ஓசூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற அனுமதித்தார். தலையில் காயமடைந்த மற்றொருவரை மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தார்.ஆவேசமடைந்த சுதர்சன்யாதவ், டாக்டரிடம், ஏன் இங்கு வைத்து சிகிச்சை அளிக்க முடியதா, 500 ரூபாய் கொடுத்தால் தான் சிகிச்சை கொடுப்பீர்களா, என, திட்டியுள்ளார். அதிருப்தியடைந்த டாக்டர் செந்தில், சுதர்சன்யாதவ் வெளியேறினால் தான் சிகிச்சை அளிப்பேன், இல்லையென்றால் சிகிச்சை அளிக்க மாட்டேன்,என்றார்.
ஆவேசமடைந்த சுதர்சன் யாதவ், செந்தில் சட்டையை பிடித்து இழுத்து, கீழே தள்ளினார். அதிர்ச்சியடைந்த அவர், சக டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தார். டாக்டர்கள் அரசு மருத்துவமனையில் திரண்டனர். அதன் பின் ஓசூர் தனியார் திருமண மண்டபத்தில் அவர்கள் கூடி, சம்பந்தப்பட்ட, அ.தி.மு.க., பிரமுகர் மீது புகார் செய்வது, போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் வேலைநிறுத்தம் செய்வது, முதல்வரிடம் புகார் செய்வது என முடிவு செய்தனர்.
உள்ளூர், அ.தி.மு.க., வினர், டாக்டர்களை சமாதானம் செய்து புகார் செய்யாமல் சுமூகமாக பேசி முடித்து கொள்ள முயன்றனர். ஆனால், பாதிக்கப்பட்ட டாக்டர் செந்தில் டவுன் போலீஸில் புகார் செய்தார். போலீஸார், சுதர்சன்யாதவை கைது செய்தனர்.
ஓசூர் அரசு மருத்துவமனையில் நேற்று முன் தினம் இரவு, அறுவை சிகிச்சைட டாக்டர் செந்தில், 38, பணியில் இருந்தார்.இரவு 10.30 மணிக்கு விபத்தில் காயமடைந்த இருவரை பாரதிதாசன் நகரை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் சுதர்சன்யாதவ், 40, சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.
டாக்டர் செந்தில் இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து ஒருவரை ஓசூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற அனுமதித்தார். தலையில் காயமடைந்த மற்றொருவரை மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தார்.ஆவேசமடைந்த சுதர்சன்யாதவ், டாக்டரிடம், ஏன் இங்கு வைத்து சிகிச்சை அளிக்க முடியதா, 500 ரூபாய் கொடுத்தால் தான் சிகிச்சை கொடுப்பீர்களா, என, திட்டியுள்ளார். அதிருப்தியடைந்த டாக்டர் செந்தில், சுதர்சன்யாதவ் வெளியேறினால் தான் சிகிச்சை அளிப்பேன், இல்லையென்றால் சிகிச்சை அளிக்க மாட்டேன்,என்றார்.
ஆவேசமடைந்த சுதர்சன் யாதவ், செந்தில் சட்டையை பிடித்து இழுத்து, கீழே தள்ளினார். அதிர்ச்சியடைந்த அவர், சக டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தார். டாக்டர்கள் அரசு மருத்துவமனையில் திரண்டனர். அதன் பின் ஓசூர் தனியார் திருமண மண்டபத்தில் அவர்கள் கூடி, சம்பந்தப்பட்ட, அ.தி.மு.க., பிரமுகர் மீது புகார் செய்வது, போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் வேலைநிறுத்தம் செய்வது, முதல்வரிடம் புகார் செய்வது என முடிவு செய்தனர்.
உள்ளூர், அ.தி.மு.க., வினர், டாக்டர்களை சமாதானம் செய்து புகார் செய்யாமல் சுமூகமாக பேசி முடித்து கொள்ள முயன்றனர். ஆனால், பாதிக்கப்பட்ட டாக்டர் செந்தில் டவுன் போலீஸில் புகார் செய்தார். போலீஸார், சுதர்சன்யாதவை கைது செய்தனர்.
அரசு மருத்துவமனையில் பிறப்பு, இறப்பு பதிவு மையம்
மதுரை: மதுரை அரசு பொது மருத்துவமனையில் பிறப்பு, இறப்பு பதிவு மையம் நேற்று துவங்கப்பட்டது.
ரூ.48ஆயிரம் மதிப்புள்ள காது கேட்கும் கருவிகளை, மருத்துவமனை டீன் மோகன் வழங்கினார். தொடர்ந்து அவர் கூறியதாவது: இதற்கு முன்பும், மருத்துவமனையில் பிறப்பு, இறப்பு மையம் சிறியளவில் செயல்பட்டது. தற்போது மகப்பேறு பிரிவு வார்டு அருகிலேயே, புதிய அலுவலகம் துவங்கப்பட்டுள்ளது. தினமும் 50 - 60 குழந்தைகள் வரை பிறக்கின்றனர். குழந்தை பிறந்தவுடன், இம்மையத்திற்கு வந்து இலவசமாக பிறப்புச் சான்றிதழுக்கு பதிவுசெய்யலாம். பெயர், முகவரியை,தெளிவாக குறிப்பிட்டால், சரியான சான்றிதழ் கிடைக்கும். கடந்தஓராண்டுக்குள் வாங்கிய சான்றிதழில், பெயர், முகவரி தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால், உரிய ஆவணங்களை காண்பித்து, சரிசெய்யலாம். இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும். குழந்தைகளுக்கு பெயர் வைத்தபின், அதிகபட்சமாக ஓராண்டிற்குள் பெயருடன் இலவசமாக மீண்டும் பதிவு செய்யலாம்.
பிறந்த குழந்தை, நோய், விபத்து, தற்கொலை மற்றும் முதுமையால் மாதந்தோறும், 500 பேர் வரை, மருத்துவமனையில் இறக்கின்றனர். இவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வாங்க, இனிமேல் அலையவேண்டியதில்லை. இங்கு ஏற்படும் அனைத்து வகையான இறப்பு நிகழ்வுகளுக்கும், உடனடி இறப்புச் சான்றிதழ் பெறலாம், என்றார். டாக்டர் வடிவேல் முருகன், சுகாதார ஆய்வாளர் இளையராஜா உடன் பங்கேற்றனர்.
ரூ.48ஆயிரம் மதிப்புள்ள காது கேட்கும் கருவிகளை, மருத்துவமனை டீன் மோகன் வழங்கினார். தொடர்ந்து அவர் கூறியதாவது: இதற்கு முன்பும், மருத்துவமனையில் பிறப்பு, இறப்பு மையம் சிறியளவில் செயல்பட்டது. தற்போது மகப்பேறு பிரிவு வார்டு அருகிலேயே, புதிய அலுவலகம் துவங்கப்பட்டுள்ளது. தினமும் 50 - 60 குழந்தைகள் வரை பிறக்கின்றனர். குழந்தை பிறந்தவுடன், இம்மையத்திற்கு வந்து இலவசமாக பிறப்புச் சான்றிதழுக்கு பதிவுசெய்யலாம். பெயர், முகவரியை,தெளிவாக குறிப்பிட்டால், சரியான சான்றிதழ் கிடைக்கும். கடந்தஓராண்டுக்குள் வாங்கிய சான்றிதழில், பெயர், முகவரி தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால், உரிய ஆவணங்களை காண்பித்து, சரிசெய்யலாம். இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும். குழந்தைகளுக்கு பெயர் வைத்தபின், அதிகபட்சமாக ஓராண்டிற்குள் பெயருடன் இலவசமாக மீண்டும் பதிவு செய்யலாம்.
பிறந்த குழந்தை, நோய், விபத்து, தற்கொலை மற்றும் முதுமையால் மாதந்தோறும், 500 பேர் வரை, மருத்துவமனையில் இறக்கின்றனர். இவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வாங்க, இனிமேல் அலையவேண்டியதில்லை. இங்கு ஏற்படும் அனைத்து வகையான இறப்பு நிகழ்வுகளுக்கும், உடனடி இறப்புச் சான்றிதழ் பெறலாம், என்றார். டாக்டர் வடிவேல் முருகன், சுகாதார ஆய்வாளர் இளையராஜா உடன் பங்கேற்றனர்.
2014ம் ஆண்டுக்கு பின்னால் கோர்ட் மூலம் பிறப்புச் சான்று: சுகாதாரத் துறை அதிகாரி தகவல்
வரும்,
2014ம் ஆண்டுக்கு பின், கோர்ட் மூலமே, பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழ்
பெறும் நிலை ஏற்படும் என, சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பிறப்பு,
இறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சான்றுகளை பெற, பதிவு
செய்யாதவர்கள், ஓராண்டுக்குள் உரிய ஆவணங்களை கொடுத்து சான்றிதழ் பெறுவது
நடைமுறையில் உள்ளது. இறப்பு சான்றிதழை பொறுத்தவரை, பதிவு செய்யத்
தவறியவர்கள், ஓராண்டுக்கு பின், தாலுகா அலுவலகங்களில், என்.ஓ.சி., பெற்று,
கோர்ட் மூலம் பெற முடியும். என்.ஓ.சி., பெறுவதற்காக, தினமும் தாலுகா
அலுவலகத்திற்கு ஏராளமானோர் அலைய வேண்டிய நிலை உள்ளது.சுகாதாரத் துறை
அலுவலர் ஒருவர் கூறியதாவது:தற்போது, பிறப்பு, இறப்பு சான்றிதழ் முக்கிய
ஆவணங்களில் ஒன்றாகி விட்டது. சரியான முறையில் பதிவு இருந்தால், ஓரிரு
நாளில் பெறலாம். உள்ளாட்சி அமைப்புகளில், 1950 முதல், 2014 வரை உரிய
ஆவணங்கள் கொடுத்து, பெயர்களுடன், பிறப்பு சான்று பெறலாம். 2014ம் ஆண்டுக்கு
பின், கோர்ட் மூலம் மட்டுமே, இந்த சான்றிதழை பெற முடியும். இதற்கான ஆணையை
சுகாதாரத் துறை சமீபத்தில் பிறப்பித்துள்ளது.இப்பிரச்னையைத் தவிர்க்க,
தங்கள் குழந்தைகளின் பெயர்களைப் பதிவு செய்யாத பெற்றோர், உரிய ஆவணங்களுடன்
பதிந்து சான்றிதழ்களை தற்போதே பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
-நமது நிருபர்-
-நமது நிருபர்-
மியூசியமாகிறது ராஜேஷ் கன்னா வீடு
மும்பை : இந்திய திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜேஷ்
கன்னாவின் வீடு (ஆசிர்வாத்), அவரது மகள்களின் விருப்பத்திற்கேற்ப
மியூசியமாக மாற்றப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக,
ராஜேஷ் கன்னாவின் நெருங்கிய உறவினர்கள் கூறியதாவது, இந்த தகவல் உண்மைதான்
என்றும், டுவிங்கிள் மற்றும் ரிங்கியின் விருப்பமும இதுவே ஆகும். ஆனால்,
இதுகுறித்த இறுதிமுடிவு இதுவரை எடுக்கப்படவில்லை, மியூசியமாக மாற்றப்படும்
பட்சத்தி்ல், ராஜேஷ் கன்னா பயன்படுத்திய பொருட்கள் அங்கு வைக்கப்படும்
என்று அவர்கள் கூறினர்.
Thursday, July 19, 2012
தி.மு.க.,வினர் விடுதலை ஏன்? முதல்வர் விளக்கம்
சென்னை: தி.மு.க.,வினரை கைது செய்து சிறையில் அடைப்பது அரசுக்கும்
போலீசுக்கும் பயனற்ற வேலையாக இருக்கும் என்பதால் தி.மு.க.,வினரை விடுதலை
செய்ய உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது குறித்து
முதல்வர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: சிறை நிரப்பும்
போராட்டம் நடத்தும் தி.மு.க.,வினர் ஜாமீன் கேட்கக்கூடாது என தி.மு.க.,
தலைமை உத்தரவிட்டிருந்தது. நில அபகரிப்பு புகார்கள் தி.மு.க., ஆட்சி
காலத்திலேயே கொடுக்கப்பட்டன. ஆனால் நிலத்தை அபகரித்தவர்கள் தி.மு.க.,வை
சேர்ந்தவர்களாக இருந்ததால்அவர்கள் மீது அப்போதைய தி.மு.க., அரசு எந்தவித
நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேர்தல் வாக்குறுதிப்படி, அ.தி.மு.க, ஆட்சி அமைந்ததும் நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிலத்தை அபகரித்தவர்கள் தி.மு.க.,வினர் என்பதால் அவர்கள் பாதிக்கப்பட்டனர். தி.மு.க., மீது ஏற்பட்டுள்ள வெறுப்பை திசை திருப்பவும், தி.மு.க., மீது கூறப்படும் ஊழல்புகார்களைமறைக்கவுமே சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட்டது.போராட்டத்தில் ஈடுபடும் தி.மு.க.,வினரை கைது செய்து சிறையில் அடைப்பது அரசுக்கும், போலீசுக்கும் பயனற்ற வேலையாக அமையும் என்பதால் அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டேன் என கூறியுள்ளார்.
தேர்தல் வாக்குறுதிப்படி, அ.தி.மு.க, ஆட்சி அமைந்ததும் நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிலத்தை அபகரித்தவர்கள் தி.மு.க.,வினர் என்பதால் அவர்கள் பாதிக்கப்பட்டனர். தி.மு.க., மீது ஏற்பட்டுள்ள வெறுப்பை திசை திருப்பவும், தி.மு.க., மீது கூறப்படும் ஊழல்புகார்களைமறைக்கவுமே சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட்டது.போராட்டத்தில் ஈடுபடும் தி.மு.க.,வினரை கைது செய்து சிறையில் அடைப்பது அரசுக்கும், போலீசுக்கும் பயனற்ற வேலையாக அமையும் என்பதால் அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டேன் என கூறியுள்ளார்.
செங்கோட்டையனுக்கு "கல்தா': முதல்வர் முடிவின் பின்னணி என்ன?
சென்னை:முதல்வர் எச்சரிக்கைக்கு பிறகும், தனது முன்னாள் உதவியாளருக்கு
சாதகமாக, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது உள்ளிட்ட காரணங்களால்,
செங்கோட்டையனின் அமைச்சர் மற்றும் கட்சிப் பதவி பறிக்கப்பட்டதாக
அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அ.தி.மு.க.,வின், சீனியர் கட்சி
நிர்வாகி என்று கருதப்படும், செங்கோட்டையனுக்கு, அ.தி.மு.க., அமைச்சரவை
பொறுப்பேற்றதும், வேளாண்மைத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கட்சியின்
தலைமை நிலையச் செயலர் என்ற முந்தைய பதவியும் தொடர்ந்ததால்,
அமைச்சரவையிலும், கட்சியிலும் அவர் முக்கியத்துவம் பெற்றார். இருப்பினும்,
அவருக்கு, செக் வைக்கும் வகையில், செங்கோட்டையனின் சொந்த மாவட்டமான ஈரோட்டை
சேர்ந்த ராமலிங்கத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
முதல்வரிடம் புகார்
இந்நிலையில், செங்கோட்டையனிடம் நீண்ட காலமாகஉதவியாளராக இருந்த ஆறுமுகம் வடிவில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டது. நிழல் அமைச்சராக செயல்படுகிறார்; குடும்பத்தை விட்டு, செங்கோட்டையனை பிரித்து வைத்துள்ளார், என ஆறுமுகம் மீது, பல்வேறு புகார்கள் எழுந்தன. புகார்களுக்கு பிறகும், ஆறுமுகம் மீதான, பாசத்தை செங்கோட்டையன் விடவில்லை.
ஒரு கட்டத்தில், வெறுத்துப்போன செங்கோட்டையனின் மனைவி மற்றும் மகன் கதிர் ஆகியோர், முதல்வர் ஜெயலலிதாவை நேரடியாக சந்தித்து, செங்கோட்டையனின் செயல்பாடுகள் குறித்து புகார் தெரிவித்தனர். இதில், உதவியாளர் ஆறுமுகத்துக்கு, முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதன், பின்னணி குறித்தும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலாகா மாற்றம்
இதையடுத்து, செங்கோட்டையனை நேரில் அழைத்து, முதல்வர் ஜெயலலிதா எச்சரித்தார். அவரிடம் இருந்த வேளாண்மைத் துறை பறிக்கப்பட்டு, ஜூனியர் அமைச்சர் வசமிருந்த தகவல் தொழில்நுட்பத்துறை வழங்கப்பட்டது.செங்கோட்டையனின் உதவியாளர் பணியில் இருந்த ஆறுமுகம் நீக்கப்பட்டதோடு, அவர் மீது வழக்குகள் பாய்ந்தன. ஆறுமுகம் கைதானார். உதவியாளர் தொடர்பான விவகாரங்களில், பட்டும் படாமல் ஒதுங்கி இருந்ததால், அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது, செங்கோட்டையனுக்கு, வருவாய்துறை வழங்கப்பட்டது. அமைச்சரவையில் தனக்கு மீண்டும் முக்கியத்துவம் கிடைத்ததையடுத்து, செங்கோட்டையனின் செயல்பாடுகள் மாறியதுதான் அவரது பதவி பறிப்புக்கு காரணம் என்கின்றனர் அ.தி.மு.க.,வினர்.
கொடநாட்டிலிருந்து திரும்பியதும்,நேற்று மாலை, செங்கோட்டையனை போயஸ் கார்டனுக்கு வரவழைத்த முதல்வர் ஜெயலலிதா, அவரின் செயல்பாட்டில் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அவர் மீது வந்த புகார்கள் குறித்து, அப்போது விளக்கம் கேட்டதாகக் கூறப்படுகிறது.செங்கோட்டையைன் அளித்த விளக்கத்தில், திருப்தியடையாத ஜெயலலிதா, அமைச்சர் மற்றும் கட்சிப் பொறுப்புகளிலிருந்து அவரை நீக்கியுள்ளார் எனஅ.தி. மு.க.,வினர் கூறுகின்றனர்.
புகார்கள் என்ன?
இது குறித்து அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:உதவியாளர் ஆறுமுகத்துக்கு, எவ்விதத்திலு<ம் உதவக்கூடாது என்று முதல்வர் எச்சரித்த நிலையில், சில மாதங்கள் மட்டுமே, அதை மதித்து நடந்துள்ளார். அதன்பின், உதவியாளர் வழக்கில் தலையிட்டு, காவல்துறைக்கு, சில உத்தரவுகளை, செங்கோட்டையன் பிறப்பித்ததாக, முதல்வருக்கு புகார் போனது. தனது எச்சரிக்கைக்கு பிறகும், உதவியாளர் ஆறுமுகம் விவகாரத்தில், செங்கோட்டையன் தலையிட்டது, முதல்வருக்கு, கோபத்தை ஏற்படுத்தி, பதவி பறிப்புக்கு வித்திட்டுள் ளது.மேலும், ஜூனியர் அமைச்சர்களிடம், செங்கோட்டையன் நடந்து கொள்ளும் விதம் குறித்தும், முதல்வருக்கு புகார்கள் சென்றுள்ளன. கட்சியில் கோஷ்டி சேர்க்கும் வகையில், தனது ஆதரவு அமைச்சர்கள், நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, செங்கோட்டையன் செயல்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருவாய் துறையில், சமீபகாலத்தில் வழங்கப்பட்ட சில உத்தரவுகள் குறித்தும், முதல்வரின் கவனத்துக்கு, அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். இது போன்ற காரணங்களால் அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.ஆறு முறை எம்.எல்.ஏ.,
அ.தி.மு.க.,வின் உயர்மட்ட தலைவர்களுள் ஒருவராக விளங்கிய செங்கோட்டையன், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர். 1977 தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியிலிருந்து முதல் முறையாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் பின் ஐந்து முறை எம்.எல்.ஏ., வாக தேர்வு பெற்ற செங்கோட்டையன், 1991 - 96ல் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் போக்குவரத்து மற்றும் வனத்துறை அமைச்சராக பணியாற்றினார். 2011ல் வேளாண் துறை அமைச்சரானார். பின் தகவல் தொழில்நுட்பத் துறை, வருவாய்த்துறை அமைச்சரானார்.
முதல்வரிடம் புகார்
இந்நிலையில், செங்கோட்டையனிடம் நீண்ட காலமாகஉதவியாளராக இருந்த ஆறுமுகம் வடிவில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டது. நிழல் அமைச்சராக செயல்படுகிறார்; குடும்பத்தை விட்டு, செங்கோட்டையனை பிரித்து வைத்துள்ளார், என ஆறுமுகம் மீது, பல்வேறு புகார்கள் எழுந்தன. புகார்களுக்கு பிறகும், ஆறுமுகம் மீதான, பாசத்தை செங்கோட்டையன் விடவில்லை.
ஒரு கட்டத்தில், வெறுத்துப்போன செங்கோட்டையனின் மனைவி மற்றும் மகன் கதிர் ஆகியோர், முதல்வர் ஜெயலலிதாவை நேரடியாக சந்தித்து, செங்கோட்டையனின் செயல்பாடுகள் குறித்து புகார் தெரிவித்தனர். இதில், உதவியாளர் ஆறுமுகத்துக்கு, முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதன், பின்னணி குறித்தும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலாகா மாற்றம்
இதையடுத்து, செங்கோட்டையனை நேரில் அழைத்து, முதல்வர் ஜெயலலிதா எச்சரித்தார். அவரிடம் இருந்த வேளாண்மைத் துறை பறிக்கப்பட்டு, ஜூனியர் அமைச்சர் வசமிருந்த தகவல் தொழில்நுட்பத்துறை வழங்கப்பட்டது.செங்கோட்டையனின் உதவியாளர் பணியில் இருந்த ஆறுமுகம் நீக்கப்பட்டதோடு, அவர் மீது வழக்குகள் பாய்ந்தன. ஆறுமுகம் கைதானார். உதவியாளர் தொடர்பான விவகாரங்களில், பட்டும் படாமல் ஒதுங்கி இருந்ததால், அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது, செங்கோட்டையனுக்கு, வருவாய்துறை வழங்கப்பட்டது. அமைச்சரவையில் தனக்கு மீண்டும் முக்கியத்துவம் கிடைத்ததையடுத்து, செங்கோட்டையனின் செயல்பாடுகள் மாறியதுதான் அவரது பதவி பறிப்புக்கு காரணம் என்கின்றனர் அ.தி.மு.க.,வினர்.
கொடநாட்டிலிருந்து திரும்பியதும்,நேற்று மாலை, செங்கோட்டையனை போயஸ் கார்டனுக்கு வரவழைத்த முதல்வர் ஜெயலலிதா, அவரின் செயல்பாட்டில் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அவர் மீது வந்த புகார்கள் குறித்து, அப்போது விளக்கம் கேட்டதாகக் கூறப்படுகிறது.செங்கோட்டையைன் அளித்த விளக்கத்தில், திருப்தியடையாத ஜெயலலிதா, அமைச்சர் மற்றும் கட்சிப் பொறுப்புகளிலிருந்து அவரை நீக்கியுள்ளார் எனஅ.தி. மு.க.,வினர் கூறுகின்றனர்.
புகார்கள் என்ன?
இது குறித்து அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:உதவியாளர் ஆறுமுகத்துக்கு, எவ்விதத்திலு<ம் உதவக்கூடாது என்று முதல்வர் எச்சரித்த நிலையில், சில மாதங்கள் மட்டுமே, அதை மதித்து நடந்துள்ளார். அதன்பின், உதவியாளர் வழக்கில் தலையிட்டு, காவல்துறைக்கு, சில உத்தரவுகளை, செங்கோட்டையன் பிறப்பித்ததாக, முதல்வருக்கு புகார் போனது. தனது எச்சரிக்கைக்கு பிறகும், உதவியாளர் ஆறுமுகம் விவகாரத்தில், செங்கோட்டையன் தலையிட்டது, முதல்வருக்கு, கோபத்தை ஏற்படுத்தி, பதவி பறிப்புக்கு வித்திட்டுள் ளது.மேலும், ஜூனியர் அமைச்சர்களிடம், செங்கோட்டையன் நடந்து கொள்ளும் விதம் குறித்தும், முதல்வருக்கு புகார்கள் சென்றுள்ளன. கட்சியில் கோஷ்டி சேர்க்கும் வகையில், தனது ஆதரவு அமைச்சர்கள், நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, செங்கோட்டையன் செயல்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருவாய் துறையில், சமீபகாலத்தில் வழங்கப்பட்ட சில உத்தரவுகள் குறித்தும், முதல்வரின் கவனத்துக்கு, அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். இது போன்ற காரணங்களால் அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.ஆறு முறை எம்.எல்.ஏ.,
அ.தி.மு.க.,வின் உயர்மட்ட தலைவர்களுள் ஒருவராக விளங்கிய செங்கோட்டையன், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர். 1977 தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியிலிருந்து முதல் முறையாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் பின் ஐந்து முறை எம்.எல்.ஏ., வாக தேர்வு பெற்ற செங்கோட்டையன், 1991 - 96ல் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் போக்குவரத்து மற்றும் வனத்துறை அமைச்சராக பணியாற்றினார். 2011ல் வேளாண் துறை அமைச்சரானார். பின் தகவல் தொழில்நுட்பத் துறை, வருவாய்த்துறை அமைச்சரானார்.
Subscribe to:
Posts (Atom)