திருச்சி: சென்னையில் நர்ஸ் வேலைக்கு வந்த, கேரள இளம்பெண்ணை பாலியல்
பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கிய ஆயுர்வேத மருத்துவர்களை, திருச்சியில் உள்ள ஆயுர்வேத மசாஜ் சென்டர் மற்றும் ஆயுர்வேத மருத்துவமனையில் பதுங்கி
உள்ளனரா என, சென்னை போலீசார் சோதனை நடத்தினர்.
சென்னை, அண்ணா நகர் திருமங்கலத்தில் கேரளாவைச் சேர்ந்த ஆயுர்வேத
மருத்துவர்கள் அஜீல்குமார், ஷாஜித் ஆகிய இருவரும் ஆயுர்வேத மருத்துவமனை
நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன் அங்கு நர்சாக வேலைபார்க்க வந்த
ராணி,19,என்ற பெண்ணை, இரு மருத்துவர்களும் சேர்ந்து, கத்தியைக் காட்டி
மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். வெளியில் சொன்னால் கொலை
செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
அதன்பின் அங்கிருந்து இருவரும் தலைமறைவாகி விட்டனர். பலாத்காரம்
செய்யப்பட்ட நர்ஸ் ராணி, சென்னையில் உள்ள தன் உறவினர்கள் மூலம் முகப்பேர்
கிழக்கு போலீசில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், நர்சை
பாலியல் பலாத்காரம் செய்து, கொலை மிரட்டல் விடுத்து தலைமறைவான, இரு
மருத்துவர்களையும் தேடி வந்தனர்.
இந்நிலையில் மருத்துவர் அஜில்குமார்,
திருச்சி தில்லை நகரில் ஆயுர்வேத மசாஜ் சென்டரும், தென்னூரில் ஆயுர்வேத
மருத்துவமனையும் நடத்தி வருவது போலீசாருக்கு தெரியவந்தது.நேற்று மாலை
சென்னை போலீசார் திருச்சி வந்து, தில்லை நகர் மற்றும் தென்னூரில் உள்ள
மருத்துவர் அஜீல்குமார் மருத்துவமனைகளில் விசாரணை நடத்தினர்.இச்சம்பவம்
தில்லை நகர், தென்னூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலியல்
பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கிய மருத்துவர் அஜீல்குமார் தில்லை நகரில்
நடத்தி வரும் மசாஜ் கிளப்பில், சட்டவிரோத செயல்களில் ஏதும் ஈடுபட்டாரா
என்பது குறித்தும், திருச்சியில் அவர் நடத்தி வரும் மருத்துவமனைகளில் ஏதும்
சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும், சென்னை போலீசார்
விசாரித்துள்ளனர்.
No comments:
Post a Comment