Saturday, July 21, 2012

அண்ணன், தம்பியை தாக்கிய ஒருவர் கைது

கள்ளக்குறிச்சி : அண்ணன், தம்பியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரைபோலீசார் கைது செய்தனர்.
வரஞ்சரம் அடுத்த கொட்டையூர் காலனியை சேர்ந்த அன்பழகன் மகன் ஏழுமலை, 24.
இவர் நேற்று முன்தினம் இரவு கொட்டையூரில் உள்ளபெட்டிக்கடை முன்
நின்றிருந்தார். அங்கு வந்த தங்கவேல் மகன் உத்திரகுமரன், 35, என்பவரிடம்
சிகரெட் வாங்கித்தருமாறு ஏழுமலை கேட்டார். அதற்கு உத்திரகுமரன்
மறுத்துவிட்டதால் ஏழுமலை அவரைதிட்டினார். ஆத்திரமடைந்தஉத்திரகுமரன்,
ஏழுமலையை தடியால் தாக்கியுள்ளார். இதனை தடுக்க முயன்ற ஏழுமலையின் தம்பி
மணிகண்டனையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து உத்திரகுமரனை கைது செய்தனர்.

No comments:

Post a Comment