Saturday, July 21, 2012

Tamil Nadu பெஞ்சு

வாழ்க்கையிலே இதெல்லாம் சகஜம்! ஒப்புக்குச் சப்பாணியா, தேடித் தேடி எடுத்து, லிஸ்ட் கொடுத்துட்டு, இப்ப, முழியோ முழின்னு, தவிக்கிறாங்கங்க... எனக் கூறியபடி, நாயர் கடையில் வந்தமர்ந்தார் அந்தோணிசாமி.
அரசுத் துறை விவகாரம் மாதிரி தெரியுதே பா... எனக் கேட்டார் அன்வர்பாய்.
அரசு இல்லீங்க... அரசியல்... ஆளுங்கட்சில, ஒருத்தருக்கு ஒரு பதவிங்கிற திட்டத்தை அமல்படுத்த, முடிவு செஞ்சிருக்காங்க... அதுக்காக, அமைச்சர், மாவட்ட செயலர்ன்னு ஒவ்வொருத்தரும், அவங்களுக்கு மாற்றா, மூணு பேர் பட்டியலைக் கொடுத்திருக்காங்க...
தங்களுக்கு பதிலா வர்ற மாவட்ட செயலர்கள், தங்களை மீறக்கூடாது, தங்களோட கையாளா இருக்கணும்ங்கறதுக்காக, ஒப்புக்கு சப்பாணி ஆளுங்களை தேடிப் பிடிச்சு, லிஸ்ட்ல சேர்த்து, கட்சித் தலைமைக்குக் குடுத்துட்டாங்க...
தலைமையோ, பட்டியல்ல இருக்கறவங்களோட பின்னணியை, உளவுத் துறை மூலமா விசாரிச்சு, சரியான ஆளான்னு முடிவு பண்ணிட்டிருக்காங்க... அவங்கவங்க, ரெக்கமண்ட் செஞ்ச ஆளுங்க சரியில்லேங்கற விவரத்தை, தலைமை கண்டுபிடிச்சுடுச்சுன்னா, மாத்து வாங்கணுமேன்னு, முழிக்கிறாங்கங்க... எனக் கூறியபடி, அந்தோணிசாமி பெருமூச்சு விட்டார்.
நன்றி, பாராட்டுல்லாம் தெரிவிச்சு, புதிய கூட்டணியை உருவாக்குறாங்களாம் பா... என, அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.
விவரமா சொல்லுங்க... என்றார் அந்தோணிசாமி.
தமிழகத்துல, ஐ.மு., கூட்டணியைப் பலப்படுத்தணும்னு, தமிழக காங்., தலைவர் ஞானதேசிகன், மாஸ்டர் பிளான் போட்டிருக்காரு... தி.மு.க., அணியில, காங்கிரஸ், தே.மு.தி.க., - பா.ம.க., - மார்க்., கம்யூ., - ம.ம.க., புதிய தமிழகம் கட்சில்லாம் சேர்ந்து, ஒரு அணியா இருக்கணும்னு விரும்புறாரு... அதனால தான் ஜனாதிபதி தேர்தல்ல, பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு கொடுங்கன்னு, விஜயகாந்துக்கு இரண்டு முறை, ஞானதேசிகன் அறிக்கை விட்டாரு...
ராமதாசு, ஜவாஹிருல்லா, கிருஷ்ணசாமின்னு, தலைவருங்களை நேர்ல சந்திச்சு, நன்றி தெரிவிக்கணும்ன்னு, டில்லிலேர்ந்தே, எம்.எல்.ஏ.,க்களுக்கு உத்தரவு போட்டாரு... அதுக்கான வேலை இப்ப, மும்முரமா நடந்திட்டிருக்கு. இது எவ்ளோ தூரம், ஒர்க் அவுட் ஆகப் போகுதுன்னு தெரியலே பா... என விளக்கினார் அன்வர்பாய்.
செங்கோட்டையன் நீக்கத்துல புதிய தகவல் ஏதும் இருக்கா ஓய்... என ஆர்வமாகக் கேட்டார் குப்பண்ணா.
சொல்லுதேன் வே...என ஆரம்பித்தார் அண்ணாச்சி...
மாவட்ட வாரியா ஆய்வுக் கூட்டத்துக்குப் போனபோது, அ.தி.மு.க.,வினர் திரண்டு வந்து, அவரு காலுல விழுந்து ஆசி வாங்குனாவ... போறாத குறைக்கு, கார் ஊர்வலம் வேற நடந்துச்சு... இதெல்லாம், சி.எம்., காதுக்குப் போய்ட்டு...
பதவி இழந்த அன்னிக்கு ராவுல, செங்கோட்டையன் வீட்டுல, 2,000 தொண்டருங்க திரண்டிட்டிருந்தாவ... அவுகள்ள ஒருத்தரு, அண்ணே... உங்களுக்கு இப்படியொரு நிலைமையா...ன்னு கேட்டு வருத்தப்பட்டாரு... உடனே செங்கோட்டையன், அம்மா கொடுத்தாங்க... அம்மாவே எடுத்துட்டாங்க... ஏற்றம், இறக்கம்லாம், வாழ்க்கையில சகஜம் தானே... எனச் சொல்லிக்கிட்டே அழுதுட்டாரு வே... எனக் கூறி, அண்ணாச்சி எழுந்து நடந்தார்; மற்றவர்களும் நடையைக் கட்ட, பெஞ்சில் மற்றவர்கள் வந்தமர்ந்தனர்.

No comments:

Post a Comment