தர்மபுரி: தர்மபுரி அருகே சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தந்தை,
திருமணம் செய்த வாலிபர் உள்ளிட்ட ஐந்து பேரை, போலீஸார் கைது செய்தனர்.தர்மபுரி அடுத்த முக்கல்நாய்க்கன்பட்டி, மேல் ராஜாதோப்பு பகுதியை
சேர்ந்தவர் கூலி தொழிலாளி கோவிந்தசாமி. இவரது மனைவி செல்வி. இவர்களது மகள்
தனஸ்ரீ, 16 (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
ஏழு ஆண்டுகளாக, செல்வி, கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
கோவிந்தசாமி, ரேவதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். கடந்த 1ம்
தேதி, தனஸ்ரீயை, ரேவதியின் தம்பி கார்த்திக் (21) என்பவருக்கு, கோவிந்தசாமி
திருமணம் செய்து வைத்தார்.
இது குறித்து அறிந்த செல்வி, எஸ்.பி., அமீத்குமார் சிங்கிடம் புகார்
செய்தார். புகார் குறித்து விசாரிக்க, தர்மபுரி அனைத்து மகளிர்
போலீஸாருக்கு எஸ்.பி., உத்தரவிட்டார். போலீஸார் நடத்திய விசாரணையில்,
தனஸ்ரீக்கு திருமணம் நடந்தது உறுதி செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் தேவிகாராணி தலைமையிலான போலீஸார், கர்நாடகா மாநிலம்
கர்காலாவில் தங்கியிருந்த தனஸ்ரீ மற்றும் கார்த்திக்கை மீட்டு வந்தனர்.
தனஸ்ரீ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தர்மபுரி குறிஞ்சி நகரில் உள்ள
குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
இளம் வயது திருமணம் செய்து வைத்தது தொடர்பாக, கோவிந்தசாமி, கார்த்திக்
மற்றும் உறவினர்கள் நரசிம்மன், கிருஷ்ணன், பெருமாள் ஆகிய ஐந்து பேரையும்,
போலீஸார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment