ஓசூர்: ஓசூர் அரசு மருத்துவமனையில், இரவு பணி டாக்டரை சட்டையை பிடித்து
இழுத்து, கீழே தள்ளி கலாட்டா செய்த,அ.தி.மு.க., பிரமுகரை போலீஸார்கைது
செய்தனர்.
ஓசூர் அரசு மருத்துவமனையில் நேற்று முன் தினம் இரவு, அறுவை சிகிச்சைட டாக்டர் செந்தில், 38, பணியில் இருந்தார்.இரவு 10.30 மணிக்கு விபத்தில் காயமடைந்த இருவரை பாரதிதாசன் நகரை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் சுதர்சன்யாதவ், 40, சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.
டாக்டர் செந்தில் இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து ஒருவரை ஓசூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற அனுமதித்தார். தலையில் காயமடைந்த மற்றொருவரை மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தார்.ஆவேசமடைந்த சுதர்சன்யாதவ், டாக்டரிடம், ஏன் இங்கு வைத்து சிகிச்சை அளிக்க முடியதா, 500 ரூபாய் கொடுத்தால் தான் சிகிச்சை கொடுப்பீர்களா, என, திட்டியுள்ளார். அதிருப்தியடைந்த டாக்டர் செந்தில், சுதர்சன்யாதவ் வெளியேறினால் தான் சிகிச்சை அளிப்பேன், இல்லையென்றால் சிகிச்சை அளிக்க மாட்டேன்,என்றார்.
ஆவேசமடைந்த சுதர்சன் யாதவ், செந்தில் சட்டையை பிடித்து இழுத்து, கீழே தள்ளினார். அதிர்ச்சியடைந்த அவர், சக டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தார். டாக்டர்கள் அரசு மருத்துவமனையில் திரண்டனர். அதன் பின் ஓசூர் தனியார் திருமண மண்டபத்தில் அவர்கள் கூடி, சம்பந்தப்பட்ட, அ.தி.மு.க., பிரமுகர் மீது புகார் செய்வது, போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் வேலைநிறுத்தம் செய்வது, முதல்வரிடம் புகார் செய்வது என முடிவு செய்தனர்.
உள்ளூர், அ.தி.மு.க., வினர், டாக்டர்களை சமாதானம் செய்து புகார் செய்யாமல் சுமூகமாக பேசி முடித்து கொள்ள முயன்றனர். ஆனால், பாதிக்கப்பட்ட டாக்டர் செந்தில் டவுன் போலீஸில் புகார் செய்தார். போலீஸார், சுதர்சன்யாதவை கைது செய்தனர்.
ஓசூர் அரசு மருத்துவமனையில் நேற்று முன் தினம் இரவு, அறுவை சிகிச்சைட டாக்டர் செந்தில், 38, பணியில் இருந்தார்.இரவு 10.30 மணிக்கு விபத்தில் காயமடைந்த இருவரை பாரதிதாசன் நகரை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் சுதர்சன்யாதவ், 40, சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.
டாக்டர் செந்தில் இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து ஒருவரை ஓசூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற அனுமதித்தார். தலையில் காயமடைந்த மற்றொருவரை மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தார்.ஆவேசமடைந்த சுதர்சன்யாதவ், டாக்டரிடம், ஏன் இங்கு வைத்து சிகிச்சை அளிக்க முடியதா, 500 ரூபாய் கொடுத்தால் தான் சிகிச்சை கொடுப்பீர்களா, என, திட்டியுள்ளார். அதிருப்தியடைந்த டாக்டர் செந்தில், சுதர்சன்யாதவ் வெளியேறினால் தான் சிகிச்சை அளிப்பேன், இல்லையென்றால் சிகிச்சை அளிக்க மாட்டேன்,என்றார்.
ஆவேசமடைந்த சுதர்சன் யாதவ், செந்தில் சட்டையை பிடித்து இழுத்து, கீழே தள்ளினார். அதிர்ச்சியடைந்த அவர், சக டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தார். டாக்டர்கள் அரசு மருத்துவமனையில் திரண்டனர். அதன் பின் ஓசூர் தனியார் திருமண மண்டபத்தில் அவர்கள் கூடி, சம்பந்தப்பட்ட, அ.தி.மு.க., பிரமுகர் மீது புகார் செய்வது, போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் வேலைநிறுத்தம் செய்வது, முதல்வரிடம் புகார் செய்வது என முடிவு செய்தனர்.
உள்ளூர், அ.தி.மு.க., வினர், டாக்டர்களை சமாதானம் செய்து புகார் செய்யாமல் சுமூகமாக பேசி முடித்து கொள்ள முயன்றனர். ஆனால், பாதிக்கப்பட்ட டாக்டர் செந்தில் டவுன் போலீஸில் புகார் செய்தார். போலீஸார், சுதர்சன்யாதவை கைது செய்தனர்.
No comments:
Post a Comment