ப.வேலூர்:மனைவியை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய பேராசிரியர் கணவன்
மற்றும் அவரது குடும்பத்தினரை, பின்னால் இருந்து, இயக்கிய மாஜி போலீஸ், டி.எஸ்.பி., சின்னப்பன்மீது, பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தலைமறைவாக உள்ள அவரை, தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சென்னையில், தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய
நடராஜன், மனைவி விஜயலட்சுமியை கொலை செய்த விவகாரத்தில், புதிய தகவல்கள்
அடிப்படையில் போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.கொலையை மறைப்பதற்கு, அனைத்து
உதவிகளையும், ஆலோசனைகளையும், மாஜி போலீஸ், டி.எஸ்.பி., சின்னப்பன்
வழங்கியுள்ளார்.
நடராஜனை, பரமத்தி போலீசார் விசாரணை செய்த போது, அங்கு
சென்று தன்னை, மாஜி டி.எஸ்.பி., என்று அறிமுகப்படுத்திக்
கொண்டுள்ளார்.மேலும், போலீஸ் ஸ்டேஷனில் இருந்து நடராஜனை வலுக்கட்டாயமாக
அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து தலைமறைவாக காரணமாக
இருந்துள்ளார்.மாஜி டி.எஸ்.பி., சின்னப்பன் சொல்படியே, நடராஜன் மற்றும்
அவரது குடும்பத்தினர் நடந்து கொண்டுள்ள சின்னப்பன், நடராஜனுக்கு சித்தப்பா
முறை உறவு என்பது குறிப்பிடத்தக்கது.கொலை செய்துவிட்டு, நகைகளுடன் ஊர்
திரும்பிய நடராஜன், இது குறித்து தன் பெற்றோரிடம், தன் சித்தப்பா, மாஜி
டி.எஸ்.பி., சின்னப்பனிடம்விவரங்களைத் தெரிவித்தார் என்பதும் விசாரணையில்
தெரிய வந்துள்ளது.மாஜி டி.எஸ்.பி., சின்னப்பன் மீது போலீசார் வழக்கு
பதிந்து, தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment