Saturday, July 21, 2012

கள்ளக்காதலியின் கணவரை கொலை செய்த வாலிபர் கைது

கிருஷ்ணகிரி: ஊத்தகரை அருகே கள்ளக்காதலியின் கணவரை கொலை செய்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
ஊத்தங்கரை அடுத்தசின்னதள்ளப்பாடியை சேர்ந்த விவசாயி சுபாஷ் ,32 இவரது மனைவி தீபா, 27. இவருக்கும் சின்னதள்ளப்பாடியை சேர்ந்த பகீதரன், 27 என்பவருக்கும் கடந்த ஐந்தாண்டாக கள்ளத்தொடர்பு இருந்தது.இது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. சுபாஷ் தனது குடும்பத்துடன் தனது மனைவியின் ஊரான சிங்காரப்பேட்டை அருகில் உள்ள காந்திநகருக்குகடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் குடியேறினார்.ஆனாலும், தீபாவின் கள்ளக்காதல் தொடர்ந்தது. தீபாவும், பகீதரன் மற்றும் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து சுபாஷை கடந்த 14ம் தேதி மிட்டப்பள்ளியில் கொலை செய்து அப்பகுதியில் இருந்த கிணற்றில் வீசி சென்றனர். ஊத்தங்கரை போலீஸார்சுபாஷின் மனைவி தீபாவை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் படி பகீரதனை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

No comments:

Post a Comment