Friday, July 20, 2012

அரசு மருத்துவமனையில் பிறப்பு, இறப்பு பதிவு மையம்

மதுரை: மதுரை அரசு பொது மருத்துவமனையில் பிறப்பு, இறப்பு பதிவு மையம் நேற்று துவங்கப்பட்டது.
ரூ.48ஆயிரம் மதிப்புள்ள காது கேட்கும் கருவிகளை, மருத்துவமனை டீன் மோகன் வழங்கினார். தொடர்ந்து அவர் கூறியதாவது: இதற்கு முன்பும், மருத்துவமனையில் பிறப்பு, இறப்பு மையம் சிறியளவில் செயல்பட்டது. தற்போது மகப்பேறு பிரிவு வார்டு அருகிலேயே, புதிய அலுவலகம் துவங்கப்பட்டுள்ளது. தினமும் 50 - 60 குழந்தைகள் வரை பிறக்கின்றனர். குழந்தை பிறந்தவுடன், இம்மையத்திற்கு வந்து இலவசமாக பிறப்புச் சான்றிதழுக்கு பதிவுசெய்யலாம். பெயர், முகவரியை,தெளிவாக குறிப்பிட்டால், சரியான சான்றிதழ் கிடைக்கும். கடந்தஓராண்டுக்குள் வாங்கிய சான்றிதழில், பெயர், முகவரி தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால், உரிய ஆவணங்களை காண்பித்து, சரிசெய்யலாம். இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும். குழந்தைகளுக்கு பெயர் வைத்தபின், அதிகபட்சமாக ஓராண்டிற்குள் பெயருடன் இலவசமாக மீண்டும் பதிவு செய்யலாம்.
பிறந்த குழந்தை, நோய், விபத்து, தற்கொலை மற்றும் முதுமையால் மாதந்தோறும், 500 பேர் வரை, மருத்துவமனையில் இறக்கின்றனர். இவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வாங்க, இனிமேல் அலையவேண்டியதில்லை. இங்கு ஏற்படும் அனைத்து வகையான இறப்பு நிகழ்வுகளுக்கும், உடனடி இறப்புச் சான்றிதழ் பெறலாம், என்றார். டாக்டர் வடிவேல் முருகன், சுகாதார ஆய்வாளர் இளையராஜா உடன் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment